செவ்வாய், 11 அக்டோபர், 2011

காங்கிரசை அழிக்க தங்கபாலு சதி...



காங்கிரசை அழிக்க தங்கபாலு சதி...

தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ( 10.10.2011 ) பேசிய தங்கபாலு, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தால் (!) , லஞ்சம் வாங்க மாட்டார்கள். லஞ்சம் வாங்கினால் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.


இது காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இவர் சொன்னபடி செய்ய ஆரம்பித்தால் , சாதாரண கவுன்சிலரில் ஆரம்பித்து சிதம்பரம் வரை எல்லோரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டியிருக்கும். இவரது மெகா டிவியை ரெய்டு செய்தால் இவரையே நீக்க வேண்டியிருக்கும் . காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்.

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துப்படி சுவிஸ் உட்பட 10 நாடுகளின் வருமானமே இந்திய காங்கிரஸ் தலைவர்களின் லஞ்ச பணம் தானாம்....!