வெள்ளி, 22 டிசம்பர், 2017

மோகன் விருதுகள் 2017

மோகன் விருதுகள் 2017


ஒவ்வொரு ஆண்டும் எனக்கு பிடித்த சினிமாக்களை மோகன் சினிமா விருதுகள் என்ற பெயரில் குறிப்பிட்டு வருகிறேன். அந்த வரிசையில் இதோ வெற்றிகரமாக 8ஆம் ஆண்டு சினிமா விருதுகள் ....

1.சிறந்த படம் :
குற்றம் 23, மாநகரம், பாகுபாலி 2, லென்ஸ்,குரங்கு பொம்மை, அறம், அருவி 



2.இயக்குனர்,கதை,திரைக்கதை,வசனம்/தயாரிப்பு
கோபி நயினார், நயன்தாரா(அறம்), அருண்பிரபு புருஷோத்தமன் (அருவி) 


3.நடிகர்/நடிகை
பிரபாஸ்,அனுஷ்கா(பாகுபலி2), கிஷோர்(களத்தூர் கிராமம்), நயன்தாரா,ராமச்சந்திரன்(அறம்), ரம்யாநம்பீசன்(சத்யா), அபிமன்யு சிங்(வில்லன், தீரன்), SJசூர்யா(ஸ்பைடர்) யோகிபாபு (நகைச்சுவை,என் ஆளோட செருப்பை காணோம்) பாரதிராஜா (குரங்கு பொம்மை) ஆனந்தராஜ் (மரகதநாணயம்), MSபாஸ்கர்( 8 தோட்டாக்கள்), அதிதி பாலன்(அருவி)

4.இசை/பாடல்
ஜிப்ரான்(அறம் ,தீரன் அதிகாரம் ஒன்று) ,வைரமுத்து(வான் வருவான், காற்று வெளியிடை) நா.முத்துக்குமார்(பாவங்களை சேர்த்துக் கொண்டு, தரமணி)

4.பாடகர்/பாடகி :
ஸ்ரேயாகோஷல் (நீதானே ,மெர்சல்), பிரியங்கா (அபிமானியே, என் ஆளோட செருப்பை காணோம்),ஷாஷா திருப்பதி(வான் வருவான், காற்று வெளியிடை), செந்தூரா(லட்சுமி,போகன்) , கருத்தவனெல்லாம்(அனிருத்,வேலைக்காரன்), அனிருத்(யாஞ்சி,விக்ரம் வேதா), ஷான் ரோல்டன்(வெண்பனிமலரே,ப.பாண்டி) ஆளப்போறான் தமிழன்(ஹிட் பாடல்,மெர்சல்)

5. தொழில்நுட்பம் :
ஒளிப்பதிவு (சத்யன்,தீரன்) , படத்தொகுப்பு(லாரன்ஸ் கிஷோர்,அவள், ரேமண்ட்,அருவி) , சண்டைப்பயிற்சி(அனல் அரசு, மெர்சல் ) நடனம்(ஷோபி, மெர்சல்) சாபுசிரில் (கலை,பாகுபாலி2)

புதன், 1 நவம்பர், 2017

சேலம் மாவட்டம் - வரலாறு

சேலம் மாவட்டம் - வரலாறு


1.கிமு 3 ஆம் நூற்றாண்டு : பழனி முருகன் கோவிலை உருவாக்கிய போகர் எனும் சித்தர் சேலம் கஞ்சமலை பகுதியில் வாழ்ந்ததாக சித்தர் பாடல்கள் கூறுகின்றன. அதே காலகட்டத்தில் சேலம் பகுதியில் புத்தம், ஜைன மதங்கள் பரவ தொடங்கின.

2.கிபி 1ஆம் நூற்றாண்டு : 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரோமானியர்களுடன் சேலம் வணிகத்தில் ஈடுபட்டு இருந்தது. ரோம பேரரசர் டைபிரீஸ் உருவம் பொறித்த நாணயங்கள் சேலம் கோனேரிபட்டி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3.2ஆம் நூற்றாண்டு : பாண்டியர்களின் ஆளுகைக்கு சேலம் உட்பட்டது. நெடுஞ்செழியன் கணைக்கால் இரும்பொறையின் வரலாற்று குறிப்புகள் கொல்லிமலையில் கிடைத்துள்ளன. இந்த காலத்தில் பறம்பு மலையை ஆண்ட வள்ளல் பாரியை எதிர்த்து மூவேந்தர்களும் சேலம் பகுதியில் நீண்ட காலம் தங்கி இருந்தனர். போரில் இறந்த பாரியின் மகளை சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள கோவிலில் வைத்து அவ்வையார் மணம் செய்து கொடுத்தார். அந்த கோவிலில் இன்றும் அவ்வையார் சிலை உள்ளது.

4.4ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டுகள் பல்லவர்களின் ஆட்சி நடந்தது .8 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியையும் , அடுத்த 200 ஆண்டுகள் மீண்டும் பல்லவர்கள் ஆட்சியிலும் சேலம் இருந்தது. 10,11ஆம் நூறு ஆண்டுகளில் சோழர்களின் ஆட்சிக்குள் வந்தது.

5.12ஆம் நூற்றாண்டில் ஹோய்சால மன்னர்கள் சேலத்தை ஆண்டார்கள். டெல்லி சுல்தானின் தளபதி மாலிக்காபூர் 1310 ஆம் ஆண்டு சேலம் பகுதியில் படையெடுத்து அப்போது இருந்த பாண்டிய மன்னனை வென்றான். 1368 ஆம் ஆண்டு விஜய நகர பேரரசின் கீழ் சேலம் வந்தது.நடுவே சாளுக்கிய அரசின் கீழ் வந்தாலும் 16 ஆம் நூற்றாண்டில் மீண்டும் கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் கீழ் சேலம் வந்தது.

6. 1768 இல் நடந்த மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது . சேலத்தில் ஹைதர் அலியின் காலத்தில் திருமணிமுத்தாற்றின் கரையில் கோட்டை கட்டப்பட்டது. ஆங்கிலேயரை விரட்டி அடித்த ஹைதர் அலியின் தளபதி இஸ்மாயில் கான் , தன் வீரர்களை கொண்டு சேலம் அழகாபுரம் பகுதியில் ஏரி ஒன்றை வெட்டிக்கொடுத்தார் . அவர் பெயரிலேயே அழைக்கப்பட்ட அந்த ஏரி தற்போது முழுமையாக அக்கிரமிக்கப் பட்டுவிட்டது.

7.1772இல் சேலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு,ஆட்சியர் நியமிக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டு மைசூர் போரில் திப்பு சுல்தான் இறந்ததை அடுத்து சேலம் முழுமையாக ஆங்கிலேயர்களின் கையில் சென்றது. ஹைதர் அலியிடம் இருந்து கோட்டையை கைப்பற்ற கோட்டை வாசலுக்கு எதிரே நிறுத்தப்பட்ட பீரங்கி , பிறகு நேரத்தை அறிவிக்கும் வகையில் அங்கேயே இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு பீரங்கி பிறகு இடம் மாற்றப்பட்டது. இன்றும் அந்த தெருவுக்கு "குண்டு போடும் தெரு" என்று தான் பெயர்.

8. 1862 இல் சேலம் மத்திய சிறை கட்டப்பட்டது .1866 இல் சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி ,கிருஷ்ணகிரி , நாமக்கல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

9. 1792ஆம் ஆண்டு கிண்டர்ஸ்லாய் என்ற ஆங்கிலேயர் சேலம் மாவட்டத்தின் முதல் கலெக்டராக பதவி ஏற்றார். தற்போது கலெக்டராக உள்ள திருமதி ரோகிணி, சேலத்தின் 171 வது ஆட்சியர். இந்திய அளவில் 225 ஆண்டுகளாக 170 கலெக்டர்கள் பதவியில் இருந்தது சேலத்தில் மட்டுமே.

10. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்ற ராஜாஜி , சேலம் நகரசபை தலைவராக பதவி வகித்தவர். ராஜாஜி முதல் இன்றைக்கு முதல்வர் பதவியில் இருக்கும் பழனிசாமி, சபாநாயகராக இருக்கும் தனபால் என சேலத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் ஏராளம்.

தொகுப்பு : மோகன் ,சேலம் .

சனி, 13 மே, 2017

ஒரு காபிக்கு அக்கப்போரா

ஒரு காபிக்கு அக்கப்போரா 


என்றைக்கும் இல்லாத திருநாளாக அன்று 5 மணிக்கே முழிப்பு வந்துவிட்டது . அந்த விபரீத ஆசையும் தோன்றியது . காபி குடிக்கும் ஆசை ..!
பிரிட்ஜிலேயே முதல் சோதனை தொடங்கியது . 3 கிண்ணங்களில் வெள்ளை திரவம் இருந்தது . முகர்ந்து பார்த்ததில் ஒன்று மோர் என கண்டுபிடித்து நிராகரித்துவிட்டேன் . மீதமுள்ள இரண்டு பாலில் ஒன்று பசும்பால் , ஒன்று பாக்கெட் பால் . பசும்பாலை காபிக்கும் , பாக்கெட் பாலை தயிருக்கு பயன்படுத்துவது வழக்கம்.

பாலின பாகுபாடுகளை எதிர்க்கும் எண்ணம் உள்ளவன் என்பதால் , எந்த பாலாக இருந்தாலும் சரி என ஒரு பாலை எடுத்து அடுப்பில் வைத்தேன் . பால் கொதிப்பதற்குள் முன்னேற்பாடுகளை செய்வது அவசியம் என்பதால் ஒரு கிண்ணம் , டம்ளர் , நாட்டு சர்க்கரை டப்பா எல்லாம் அருகில் எடுத்துவைத்து .. ஆபரேஷனுக்கு தயாரானேன்.

சிறிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பில்டரில் முதல் நாளே காபித்தூள் போட்டு , டிகாஷன் ரெடியாக இருக்கும். அதை எடுத்து டம்ளரில் ஊற்ற முயற்சித்த போது பில்டரை திறக்க முடியவில்லை . சில வித்தைகளை காட்டி முயற்சி செய்த போது , பில்டரின் கீழ் பாகம் கீழே விழுந்து டிகாஷன் கோவிந்தா .. இந்த களேபரத்தில் பாலும் சிறிது பொங்கி வழிந்து ...

ஒரு வழியாக எல்லாவற்றையும் துடைத்து , துடைத்த துணியையும் அலசி காயவைத்து ( பல்ப் வாங்கிய ஆதாரங்கள் இருக்க கூடாது! ) பில்டரில் இருந்த காபித்தூளிலேயே சுடுதண்ணி ஊற்றி மீண்டும் டிகாஷன் எடுத்து காபி போட்டு குடித்து பார்த்தால் .. ஸ்ட்ராங்கே இல்லை, 2வது டிகாஷன் என்பதால் தண்ணி மாதிரி இருந்தது . ம்ம்ஹ்ம் ... விடக்கூடாது , ஒரு நல்ல காபி குடித்தே ஆகவேண்டும் .

பில்டரில் இருந்த காபித்தூளை ரகசியமாக கொட்டிவிட்டு ( ஆதாரம் அழிப்பு முக்கியம் ) , பிரெஷ்ஷாக காபி தூளை போட்டு , சுடுதண்ணீர் ஊற்றினால் டிகாஷன் இறங்கவே இல்லை .! காபி தூளை அழுத்திவிட ஒரு அமுக்குவான் இருக்கும் . அதை கண்டுபிடிப்பதெல்லாம் நடக்காத காரியம் என்பதால் , கிடைத்த ஸ்பூனை வைத்து ஒருவழியாக டிகாஷன் எடுத்து , காபி போட்டு .... இந்த முறை காபி அருமையாக இருந்தது .

கிண்ணம் டம்ளர் என பாத்திரங்களை கழுவி , எல்லாவற்றையும் அதன் இடங்களில் செட்டில் செய்து .. டிவியை ஆன் செய்து அமர்வதற்கும் , மனைவி எழுந்து வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. கடிகாரத்தை பார்த்தபோது 6.30 என்றது.

ரகசிய குறிப்பு :


கடைக்கு கிளம்பும்போது காபி வேணுமா என மனைவி கேட்டாள் . சரிம்மா என கூறிவிட்டு சட்டையை எடுத்து போட்டுகொண்டு , தலையை சீவி முடிப்பதற்குள் காபி டம்ளரை நீட்டினாள் .

- மோகன், சேலம்

புதன், 29 மார்ச், 2017

மெடிமிக்ஸ்




உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 16


மெடிமிக்ஸ்


AV அனூப் என்பவரால் 1969 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கியது மெடிமிக்ஸ் சோப் உற்பத்தி . இன்று உலகெங்கும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை ஆகும் மெடிமிக்ஸ் சோப் , உலகிலேயே அதிகம் விற்பனை ஆகும் ஆயுர்வேதிக் சோப் ஆகும் . 2013 ஆண்டு மக்களின் நம்பிக்கையை பெற்ற டாப் 100 பொருட்களில் ஒன்றாக தேர்வானது. தற்போது ரெகுலர் , கிளிசரின் , சந்தனம் என பல ரகங்களில் வருகிறது .

மெடிமிக்ஸ் சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத handmade சோப் ஆகும் . மேலும் மட்கும் காகித அட்டைகளில் தான் பேக்கிங் செய்யப்படுகிறது .

மெடிமிக்ஸ் இன் AVACARE நிறுவன ஆலைகள் தமிழகம், கர்நாடகா , பாண்டிச்சேரியில் உள்ளது . சமீபத்தில் கேரளாவின் புகழ்பெற்ற மசாலா நிறுவனமான மேளம் நிறுவனத்தை கையகப் படுத்தி உள்ளது.

தயாரிப்புகள் :
மெடிமிக்ஸ் சோப் , டிவைன் சோப் , ஹேண்ட் வாஷ் , சஞ்சீவனம் பொடி வகைகள், மேளம் மசாலா , கைத்ரா சாம்பு ....

தலைமை அலுவலகம் :
AVA கேர் ,
No.1583, J-Block, 15th Main Road,
Annanagar, Chennai - 600 040
Toll Free No: 1800 103 1282

செவ்வாய், 14 மார்ச், 2017

சேலம் அசைவ உணவகங்கள்

சேலம் அசைவ உணவகங்கள் 


சேலத்திற்கு , ஏற்காட்டிற்கு வரும் மக்களுக்கு மட்டுமல்ல ... உள்ளூர் மக்களுக்கும் தேவைப்படலாம் இந்த தகவல்கள் ...

SALEM TASTE HOTELS


1. மங்களம் மிலிட்டரி ஹோட்டல் , சாந்தி தியேட்டர் எதிரில் , AA ரோடு ,
2. மங்களம் , அத்வைத ஆஷ்ரம் ரோடு , 9750391391,0427-2444424
3. மங்களம் , சீலநாய்க்கன்பட்டி பைபாஸ் ,
4. மங்களம் , ஜோய் ஆலுக்காஸ் பின்புறம்
5. ஸ்ரீ பராசக்தி ஹோட்டல் , வேங்கடப்ப ரோடு, செவ்வாய்பேட்டை , 8883112345, 9362776298

6. ராஜகணபதி ஹோட்டல் , அர்த்தநாரி தெரு , மத்திய பேருந்து நிலையம் எதிரில் , 8148791062
7. செல்வி மெஸ் , டவுன் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் , 8148791062
8. செல்வி மெஸ் , செரிரோடு , அஸ்தம்பட்டி , 0427-2310455
9. செல்வி மெஸ் , ஜோய் ஆலுக்காஸ் பின்புறம் , 0427-2331798
10. செல்வி மெஸ் , சீலநாய்க்கன்பட்டி பைபாஸ் , 0427 2281577

11. அபிராமி மெஸ் , லா காலேஜ் பஸ் ஸ்டாப் , ஏற்காடு மெயின் ரோடு , 0427-2405805
12. குமார் மிலிட்டரி ஹோட்டல் ,சங்ககிரி ரோடு , கொண்டலாம்பட்டி , 7806934322
13. NNK பிரியாணி ஹோட்டல் , அம்மாபேட்டை ,98944 85632
14. நியூ விவேகானந்தா , ஜோய் ஆலுக்காஸ் பின்புறம் , 0427 244 6497
15. கந்தவிலாஸ் மிலிட்டரி ஹோட்டல் , லைன் ரோடு , குகை , 9443703213

16. VMK ஹோட்டல் , சீலநாய்க்கன்பட்டி பைபாஸ் , 8300000559, 8300000299
17. ஷெரிப் பிரியாணி , 3 ரோடு , 9994449491
18. ராமலிங்கம் ஹோட்டல் , மெய்யனூர் ரோடு , 9843069999
19. ராமலிங்கம் ஹோட்டல், ராம் நகர் , வின்சென்ட் , 9843169999
20. ரங்க விலாஸ் , ஜெயா தியேட்டர் பின்புறம்

21. ரங்கா விலாஸ் , கோட்டை மெயின் ரோடு
22. சண்முகவிலாஸ் , சாந்தி தியேட்டர் எதிரில்
23. NNR ஹோட்டல், அம்மாபேட்டை மெயின்ரோடு,99442 69353
24. வெங்கடேஸ்வரா , குகை பாலம் அருகில், செல்வம் ஸ்டோர் எதிரில்
25. சரவணா பரோட்டாஸ், ஆர்ட்ஸ் காலேஜ் எதிரில் , 4027-6545398
26. சரவணா பரோட்டாஸ் , அண்ணா பூங்கா பின்புறம் , 0427 6535398
27. ஸ்ரீவாரி பிரியாணி ஹோட்டல் , கோகிலா மண்டபம் அருகில் , குகை

NON-VEG RESTAURANTS 


1. பார் பி குயின் , ரிலையன்ஸ் மால் அருகில் , 5 ரோடு , 2442180,2443789
2. பார் பி குயின் , ஈஸ்வரன் கோவில் அருகில் , செரிரோடு , 0427 - 2450470
3. பார் பி குயின் , புதிய பேருந்து நிலையம் எதிரில் , 99521 22991, 98941 49786
4. கேவிஸ் ரெஸ்ட்டாரெண்ட் , நகர பேருந்து நிலையம் அருகில் , 96600 15001
5. ரசிகாஸ் ரெஸ்ட்டாரெண்ட் , அண்ணா பூங்கா அருகில் , 0427 - 2412084 / 2412085
6. ரசிகாஸ் ரெஸ்ட்டாரெண்ட், தெய்வீகம் மண்டபம் அருகில் , 0427 - 2430789

7. கோல்டன் டிராகன் சைனீஸ் , சாந்தம் காப்ளக்ஸ் , 0427 244 8877
8. புளூ மூன் ஹைக்யூ - சென்னை சில்க்ஸ் எதிரில் , 0427 244 3112
9. கிரீன் பார்க் ரெஸ்ட்டாரெண்ட் , சாரதா காலேஜ் ரோடு , 0427-2447293
10. தந்தூரி வாலா , சுப்ரமணிய நகர், ஜங்சன் ரோடு , 914274040121
11.டெல்லி தர்பார் , ரிலையன்ஸ் மால் எதிரில் , ஜங்சன் ரோடு ,9487163786

 

CHAIN HOTELS 


1. அஞ்சப்பர் , பிருந்தாவன் ரோடு , 0427 233 3601
2. ஜுனியர் குப்பண்ணா , கிரீன்வேஸ் ரோடு , பேர்லண்ட்ஸ் , 094897 82555
3. திண்டுக்கல் பொன்ராம் பிரியாணி , 4 ரோடு , 0427 325 0333
4. திண்டுக்கல் வேலு பிரியாணி , SKS மருத்துவமனை ரோடு , 0427 233 0244
5. ஆம்பூர் ஸ்டார் பிரியாணி , கருப்பூர் டோல்கேட் அருகில் , 0427 234 6477

6. பார்பிக்யூ நேசன் , சாரதா காலேஜ் ரோடு , 0427 234 6477
7. THE CASCADE , சென்னை சில்க்ஸ் எதிரில் , 0427-2442505
8.சென்னை பொன்னுசாமி ஹோட்டல் , ARRS மல்டிபிளக்ஸ் எதிரில் , 0427-4031111
9. KFC சிக்கன் ,TVS பங்க் எதிரில், 4 ரோடு , 0427 402 0273

இவை தவிர சேலத்தின் அனைத்து பகுதிகளிலும் பரோட்டா கடைகள் , பிரியாணி கடைகள் உண்டு. நட்சத்திர ஹோட்டலில் உள்ள ரெஸ்ட்டாரெண்ட்கள் தனி . அசைவ உணவுகளை சேலத்தில் கொண்டாடுங்கள் .

தொகுப்பு , மோகன்,சேலம் .

சனி, 11 மார்ச், 2017

கோபால் பல்பொடி

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 15


கோபால் பல்பொடி 


1947 ஆம் ஆண்டு SPS ஜெயம் & கம்பெனி என்ற நிறுவனத்தால் மதுரையில் அறிமுகமானது கோபால் பல்பொடி . 40 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை , மலேசியா , சிங்கப்பூர் என கடல் கடந்து விற்பனை ஆன பெருமை கோபால் பல்பொடிக்கு உண்டு.

முழுக்க முழுக்க மூலிகைகளால் தயாரிக்கப்படும் கோபால் பல்பொடி பற்களின் வலிமைக்கும் , ஈறு ஆரோக்கியம் , கறை நீக்குதல் என சிறந்த மருந்தாக விளங்கியது. கெமிக்கல் நிறைந்த பேஸ்ட்டுகளும் , ஹார்டு பிரசும் (Hard T.brush) கொண்டு பல்துலக்கி பல்லின் ஆரோக்யத்தை கெடுத்துக் கொண்டோம்.

ஆனால் இன்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் கோபால் பல்பொடியை உபயோகித்து வருகிறார்கள்.தற்போது ஐரோப்பா , அமெரிக்க நாடுகளிலும் விற்பனை ஆகிறது .

தயாரிப்புகள் ; கோபால் பல்பொடி , கோபால் பேஸ்ட் , அஞ்சால் அலுப்பு மருந்து .

தலைமை அலுவலகம்
வேல் கெமிக்கல் ஒர்க்ஸ்
25, கிழக்கு நபாளையம் தெரு ,
BSNL அலுவலகம் அருகில்
மதுரை - 1
0452-2324333, 2321433

யூனிலீவர் - பாகம்-3

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 14


யூனிலீவர் - பாகம்-3

( இது உள்ளூர் பொருள் அல்ல )

உலகிலேயே அதிக நிறுவனங்களை விலைக்கு வாங்கியது பெப்ஸியோ , கோக்கோ அல்ல. யூனிலீவர் தான். கடந்த 50 ஆண்டுகளில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கி உள்ளது . வாங்கிய நிறுவனங்களில் , தன் பழைய தயாரிப்புகளுக்கு போட்டியாக உள்ள பொருட்கள் நிறுத்தப்படும் .

டாடாவிடம் 501 சலவை சோப்பை வாங்கியது . ரின் சோப்புக்கு போட்டியாக உள்ளதால் , 501 நிறுத்தப்பட்டது . டவ் சோப்புக்கு போட்டியாக உள்ள இந்துலேகா சோப்பை வாங்கி , நிறுத்திவிட்டது.

யூனிலீவர் வாங்கிய சில பிராண்டுகளை பார்ப்போம்.

1. லிப்டன் டீ(Lipton) - 1971
2. புரூக் பாண்ட்(BrookeBond) - 1845 இல் லண்டனில் தொடங்கப்பட்ட புரூக்பாண்ட் , 1905 இல் இந்தியாவில் ரெட் லேபிள் டீயை அறிமுகப் படுத்தியது . 1984 இல் யூனிலீவர் வாங்கி விட்டது .
3. பாண்ட்ஸ்(Ponds) - 1986 il தொடங்கப்பட்ட பாண்ட்ஸ் பிராண்டை 1987 இல் யூனிலீவர் வாங்கியது .

4. ஹமாம் , 501 சோப்புகள் - டாடா வின் பிராண்டுகளான இந்த சோப்களை 1993 இல் யூனிலீவர் வாங்கியது .
5. கிசான் , அன்னபூர்ணா(Kissan) - 1934 இல் தொடங்கப்பட்ட இந்திய நிறுவனமான கிசான் 1993 ஆம் ஆண்டு யூனிலீவர் வசம்
6. க்வாலிட்டி வால்ஸ்(KwalityWalls) - இந்திய ஐஸ்கிரீம் நிறுவனமான குவாலிட்டி வால்ஸ் ஐ 1995 ஆம் ஆண்டு யூனிலீவர் வாங்கியது .

7. கார்னேட்டோ(cornetto) - இத்தாலியின் கார்னேட்டோ ஐஸ்கிரீம் இப்போது யூனிலீவர் வசம் .
8. மாடர்ன் பிரட் - இந்தியாவின் மாடர்ன் பிரட் 2000 ஆம் ஆண்டு யூனிலீவர் வசம்
9. இந்துலேகா(Induleka) - கேரள ஆயுர்வேதிக் நிறுவனமான இந்துலேகா 2015 முதல் யூனிலீவர்.

10. மேக்னம்(Magnum) - இத்தாலியின் மேக்னம் ஐஸ்கிரீமின் இந்திய பிரிவு 2014 இல் யூனிலீவர் வசம் .
11. நார் சூப்(Knorr) - ஜெர்மனியின் நார் சூப் , நூடுல்ஸ் கம்பெனி 1971 முதல் லீவர் வசம்
12. லாக்மி(Lakmi) - 1957 இல் ஆரம்பித்த டாடாவின் அழகு சாதன நிறுவனமான லாக்மி 1996 ஆம் ஆண்டு லீவர் வாங்கியது.
13. பிரில்கிரீம்(Brilcream) - 1928 இல் பிரிட்டனில் தொடங்கிய பிரில்கிரீம் 2012 முதல் லீவர் வசம் .

கடைசியாக..

பல நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்ட பாதரச ஆலையை கொடைக்கானலில் யூனிலீவர் தொடங்கி , எதிர்ப்பு காரணமாக 2001 இல் மூடியது. அதில் உள்ள அபாயகரமான நசுக்கி கழிவுகள் இன்னும் அங்கேயே உள்ளது.