செவ்வாய், 20 டிசம்பர், 2011

உடையும் நிலையில் கேரள அணை - வீடியோ

முல்லை பெரியார் அணை நாளையே உடையபோவது போலவும், லட்சக்கணக்கான மக்கள் சாவபோவது போலவும் கேரளா அரசியல்வாதிகள் சரடு விட்டுக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு புதிய தகவல் வந்திருக்கிறது.


கேரளாவில் உள்ள அணைகளிலேயே முல்லை பெரியார் தான் மிகவும் பலமாக உள்ளதாகவும், என்றைக்கோ இடித்திருக்க வேண்டிய அணைகள் இன்னமும் உபயோகத்தில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியான வீடியோ பதிவு ஒன்று கிடைத்துள்ளது. கேரளாவில் நெய்யாற்றில் 1950 இல் கட்டப்பட்ட அணை ஒன்று 200 அடிக்குமேல் பெரிய விரிசல் விழுந்துள்ளது. ஆனால் அந்த அணையை இடிக்காமல் இன்னமும் பயன்படுத்தி வருகிறார்கள்.


ஒருவேளை முல்லை பெரியார் உடைந்தால், அந்த நீர் இடுக்கி அணை செல்லும் வழியில் வெறும் 450 குடும்பங்கள் மட்டுமே உள்ளன(கேரள அரசியல்வாதிகள் விடுவது டுபாக்கூர் என நிரூபணம் ஆகி உள்ளது ) ஆனால் உண்மைலேயே நிறைய மக்களுக்கு ஆபத்தான பாடாவதியான அணையை பற்றி அவர்கள் யாருமே கவலைப்படவில்லை. ஏனெனில் அதை வைத்து அரசியல் செய்ய முடியாது.


நீங்களே இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.


எண்ணமும் கருத்தும் , மோகன் .


புதன், 14 டிசம்பர், 2011

பெண்ணும் பொன்னும்

பெண்ணும் பொன்னும்



முத்துக்களோ கண்கள் என்றான்

தித்திப்பதோ கன்னம் என்றான்

பல்வரிசை பவளம் என்றான்

ஒற்றை நரை வெள்ளி என்றான்

அங்கமெல்லாம் தங்கமென்றான்

தீட்டாத வைரமென்றான்

திகட்டாத அமுதமேன்றான்

மேலுதட்டின் மச்சம் பார்த்து

அதிஷ்ட தேவதை கொட்டும் என்றான்

என் சின்னச் சிரிப்பில் விழும்

கன்னக்குழி கூட

பணக்குழியாம் - அவன் சொன்னான் .

சொன்னதற்க்கே சொக்கிப்போய்

அவன் குழியில் நான் விழுந்தேன் .

மனசெல்லாம் சிறகடிக்க

மணமேடையில் நான் இருக்க ...

முப்பது பவுன் போட்டால்தான்

முதல் முடிச்சே நான் இடுவேன்

இல்லையேல்

இந்த மூதேவி முகத்தினைப் போய்

எவன் பார்ப்பான் என்றுரைத்தான். !

மோகன்....


பின்குறிப்பு ...

என்னடா இவன் புதிதாக கவிதை வேறு எழுத ஆரம்பித்துவிட்டானா என அதிர்ச்சி அடையாதீர்கள் .சில ஆண்டுகளுக்கு முன் வாலிப வயதில் இது மாதிரி கொஞ்சம் கிறுக்குவேன்.(இப்போதும் வாலிபம் தான். அது முன்பகுதி, இது பின்பகுதி.) நான் பிளாக் ஆரம்பித்ததே என் கவிதைகளை எழுதுவதற்குத்தான். ப்ளாக்கின் ஆரம்ப பகுதிக்கு சென்று பாருங்கள் தெரியும். இனி நேரம் இருக்கும்போது ஒவ்வொன்றாய் பதிகிறேன்.சரி,இந்த கவிதை எப்படி இருக்கு... கருத்து சொல்லுங்கப்பா...!

சனி, 10 டிசம்பர், 2011

பவர் ஸ்டாரின் புதிய பூகம்பம்




தமிழ் சினிமா ரசிகபெருமக்களே..



இதோ உங்களை ரட்சிக்க மீண்டும் வருகிறார்...


தமிழ் சினிமாவின் புதிய சூறாவளி...
உங்களுக்கு ஆனந்த தொல்லை கொடுத்த ...

லத்திகா வாக லத்தியை சுழற்றிய....


பவர் ஸ்டார்....



டாக்டர் சீனிவாசனின் புதிய காவியம் ....



தேசிய நெடுஞ்சாலை...




இந்தமுறை விஜயின் ஆரம்பகால ஆஸ்தான நாயகி சங்கவியுடன்..!




இப்பொழுது ஸ்டில் ...



விரைவில் பூகம்பம்....

வடிவேலு ஒரு படத்தில் சுந்தர். சி இடம் சொல்லுவார்.. ''தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வாடா பாக்கலாம்'' ன்னு.
அதையேதான் உங்களிடம் சொல்லுகிறோம். படம வரட்டும். தைரியம் இருந்தால் தியேட்டர் பக்கம் வாருங்கள் பார்க்கலாம்.!



வியாழன், 1 டிசம்பர், 2011

பாலை - மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட படம் - விகடன்

பெரியார்,காமராஜை போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு ''பாலை'' படத்தை மதிப்பெண்கள் வழங்காமல் பாராட்டி இருக்கிறது ஆனந்த விகடன்.

கடந்த சில ஆண்டுகளில் அரிதாக சில படங்களுக்கு விகடன் மதிப்பெண்கள் போடாமல் இருந்திருக்கிறது. அவையும் வெவ்வேறு காரணங்களுக்காக.

துள்ளுவதோ இளமை படத்திற்கு மதிப்பெண் வழங்குவதே ஆபாசத்திற்கு ஆதராவாகிவிடும் என்ற காரனத்தால் மதிப்பெண் வழங்கவில்லை.


அதன் பிறகு சங்கரின் பாய்ஸ் படம். அதன் விமர்சனம் இன்றும் நினைவில் இருக்கிறது. வக்கிர மனம் கொண்ட ஒருசில இளைஞர் களுக்கு ஒருவேளை இந்த படம் பிடிக்கலாம். மற்றவர்களுக்கு சாரி .. என விமர்சித்தது.


இந்த இரண்டு ஆபாச படங்களிலும் பிரபலமானவர்கள் சம்பந்தப் பட்டிருந்ததால் இந்த அளவுக்கு விமர்சனம் செய்தது. அதன்பிறகு வந்த இந்தமாதிரியான படங்களை விகடன் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல் ஒரு படம் எப்படியெல்லாம் எடுக்ககூடாதோ , அப்படியெல்லாம் எடுக்கப்பட்ட ''இந்திரலோகத்தில் நா.அழகப்பன்'' என்ற படத்திற்கு மதிப்பெண் வழங்கவில்லை.


பெண் குழந்தை தொழிலாளி பற்றிய குட்டி என்ற படத்திற்கு மதிப்பெண் வழங்காமல் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக அறிவித்தது விகடன்.


பெரியார் ,காமராஜர் ஆகிய படங்களை மதிப்பெண்களை தாண்டி ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் மதிப்பெண் தராமல் ஊக்குவித்தது விகடன்.




நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்போது பாலை படத்திற்கு அந்த பெருமை கிடைத்துள்ளது.


2000 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்காக போராடிய தமிழர்களின் வீர வரலாற்றைப் படமாகி இருக்கிறார்கள். மதிப்பெண்களை தாண்டி அனைவரும் பார்க்க சொல்கிறது விகடன். பார்ப்போம்.
இந்த
மாதிரி படங்களை வரவேற்போம்.

திங்கள், 28 நவம்பர், 2011

மீண்டும் வெள்ளையர்க்கு அடிமை ஆவோம்

சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார். இதற்காக நாம் முழுமையாக சந்தோசப் பட முடியாது. தமிழ்நாடு , மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அவர்களால் நேரடியாக கடை விரிக்க முடியாதே தவிர , மறைமுகமாக அவர்கள் நம்மை சுரண்டப் போகிறார்கள்.


எப்படி என்று சொல்கிறேன்....


பச்சை கடலை என்ற சிகப்பு மூகடலை உங்களுக்கு தெரியும் . அதிலிருந்து கடலைப்பருப்பு,கடலைமாவு,பொட்டுக்கடலை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் உற்பத்தி ஆகும் ஒட்டுமொத்த பச்சைக் கடலையை ( சில கோடி மூட்டைகள் ) ரிலையன்ஸ், ருச்சி சோயா, கார்த்திக் சிதம்பரத்தின் பினாமி நிறுவனம் உட்பட வெறும் நான்கு நிறுவனங்கள் வாங்கின. இதனால் வெளிமார்க்கெட்டில் இந்தப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டது. சுமார் இரண்டு மடங்கு விலை ஏறிய பிறகு தீபாவளிக்கு சில நாட்களுக்கு பிறகு அவை வெளி மார்கெட்டில் விடப்பட்டன.



அதாவது இந்த விலை உயர்வால் விவசாயி, வணிகர்கள் , மக்கள் யாருக்கும் பயன் இல்லை.


இப்போது காங்கிரஸ் அரசு அனுமதிக்க போகும் அந்நிய நிறுவனங்கள் இதேபோல்தான் செயல்பட போகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த விவசாய பொருட்களையும் இந்த ஒரு சில நிறுவனங்கள் வாங்கிவிடும். அதன் பிறகு அவர்கள் சொல்லுவது தான் விலை.



நூறு கோடி மக்களின் பணம் ,ஐந்து கோடி சிறு வணிகர்களின் உழைப்பை வெறும் பத்து ,இருவது அன்னிய நிறுவனங்கள் சுரண்டப் போகின்றன. இவர்களை அனுமதித்த இங்கிலாந்து,தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறு வணிகர்கள் தெருவுக்கு வந்து விட்டனர்.




எனவே இவர்களை அனுமத்தித்தால் பாதிக்கப்பட போவது வணிகர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியனும் இவர்கள் சொல்லும் விலைக்குதான் பொருட்களை வாங்கியாக வேண்டும் . இதனால் ஆதாயம் அடைய போவது ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே.


வெளிநாட்டு பொருளை வாங்கறது வேற .. வெளிநாட்டுக்காரன் கிட்ட எல்லாத்தையும் கொடுத்துத்துட்டு ,அவன்கிட்டே அவன் சொல்ற விலைக்கு வாங்கறது வேற... காந்தி காலத்துல உப்பு சத்யாகிரகம் ன்னு ஒன்னு நடத்துனாரு தெரியுமா. வெள்ளகாரன்களை தவிர யாரும் உப்பு தயாரிக்க கூடாது , உப்பை அவன்களிடம்தான் வரி செலுத்தி வாங்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்தனர். அதை எதிர்த்துதான் காந்தி போராடி வெற்றி பெற்றார். காந்தி எதை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றுத் தந்ததாரோ , கிட்டத்தட்ட அதே வடிவத்தை இன்றைய நவீன காங்கிரஸ் தலைவர்கள் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.



செவ்வாய், 11 அக்டோபர், 2011

காங்கிரசை அழிக்க தங்கபாலு சதி...



காங்கிரசை அழிக்க தங்கபாலு சதி...

தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ( 10.10.2011 ) பேசிய தங்கபாலு, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தால் (!) , லஞ்சம் வாங்க மாட்டார்கள். லஞ்சம் வாங்கினால் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.


இது காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இவர் சொன்னபடி செய்ய ஆரம்பித்தால் , சாதாரண கவுன்சிலரில் ஆரம்பித்து சிதம்பரம் வரை எல்லோரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டியிருக்கும். இவரது மெகா டிவியை ரெய்டு செய்தால் இவரையே நீக்க வேண்டியிருக்கும் . காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்.

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துப்படி சுவிஸ் உட்பட 10 நாடுகளின் வருமானமே இந்திய காங்கிரஸ் தலைவர்களின் லஞ்ச பணம் தானாம்....!

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

ஆசை ,பேராசை,நப்பாசை ...!











ஆசை ,பேராசை,நப்பாசை ...!

ஆசை
உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை பிடிக்கும்
- கருணாநிதி

பேராசை
காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு அதிக இடங்களை கைப்பற்றும்
- தங்கபாலு


நப்பாசை
இந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவோம்- ராமதாஸ்

நிராசை
நாங்க கடைசி வரைக்கும் முட்டாளாகவே இருக்க மாட்டோம் என மக்கள் முடிவெடுத்த பின் ஆசை,பேராசை,நப்பாசை எல்லாம் நிராசை ஆகும்.


எண்ணமும்,கருத்தும் J . மோகன்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அதிர்ச்சி.காம்

அதிர்ச்சி.காம்

தினத்தந்தியில் தினமும் வெளிநாட்டு வினோதங்கள் என்ற தலைப்பில் , உலக அளவில் நடக்கும் வேடிக்கை வினோத செய்திகள் இடம்பெறும் . கிட்டத்தட்ட அதே பாணியில் உலக அளவிலான வேடிக்கை வினோத செய்திகளைத் தருகிறது , அதிர்ச்சி.காம் வலைத்தளம். மிகவும் சுவாரஸ்யமான வலைத்தளம். அடிக்கடி விஜயம் செய்யுங்கள் .
அதிர்ச்சியிலிருந்து ஒரு செய்தி உங்களுக்காக...

என்னை கர்ப்பமாக்கினால் 1மில்லியன் யுவான்கள் : சீன அழகி அதிரடி!

மேலத்தேய நாடுகளில் பெண்கள் தங்கள் கற்பை ஏலம் விடுவதென்பது சர்வ சாதாரண ஒரு விடயமாகிவிட்டது. அது போன்று அண்மையில் சீனா நாட்டைச்சேர்ந்த இளம் அழகிய யுவதி ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை விடுத்துள்ளார். 28 வயது நிரம்பிய அழகிய பெண்தான் கியான் யாவ் . இவருடைய கணவர் ஹாங்கொங் நாட்டின் பணக்கார தொழிழதிபர். இவர் ஒரு விபத்தில் இறந்துவிட தனது பணக்கார குடும்பத்திற்கு வாரிசை பெற்றுக்கொடுக்க ஒரு நல்ல மனிதனை தேட முடிவெடுத்தார். இதற்காக சீன பத்திரிகைகள் அலுவலகங்கள் எங்கும் விளம்பர பதாதைகளை அடித்து ஒட்டத்தொடங்கினார். அதில் தன்னை கர்ப்பமாக்கும் ஆணுக்கு 1மில்லியன் யுவான்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டார். மேலும் தனது தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு அதன் மூலம் தொடர்புகொண்டு பேசி எனக்கு சரி என்றவுடன் முற்பணமாக 30 இலட்சம் யுவான்கள் தரமுடியும் எனவும் பின்னர் உங்களை நாடிவந்து கர்ப்பமாகிய பின்னர் மிகுதி தொகை தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ம்ம்… எங்கே செல்லும் இந்த பாதை…..??

மேலும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு
http://www.athirchi.com/

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

சேலம் மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம்

சேலம் மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம்

சேலம் மாவட்ட பத்திரிக்கை நண்பர்களால் நடத்தப்படும் வலைப்பூ. உள்ளூர் செய்திகள்,புகை படங்கள் , குறும்படங்கள் என ரசிக்கும் படியான வலைப்பூ . சேலம் சார்ந்த வலைப்பூ என்பதால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

மாதிரிக்கு அதில் வரும் ஒரு குறும் படம்.

கீழே உள்ள லிங்க் -ஐ அழுத்துங்கள்.

.: குறும்படம்: "asl please":
தங்கள் குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் மீது அதிக அக்கறையும் கவனமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

தங்களுக்குப் பெற்றோர் தரும் சுதந்திரத்தைத் தவறாகக் குழந்தைகளும் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

இணைய பயன்பாடுகளில் சாட்டிங் போன்றவற்றில் முகம் காட்டாமல் புனை பெயருடன் கதைத்துக் கற்பனையுலகில் அகமகிழும் இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கை மணிதான் இந்தக் குறும்படம்.

அந்தக் காலத்தில் கே.பாலசந்தர் இயக்கி வெளிவந்த 'நியூவேவ்' படங்களை இந்தப் படம் நினைவு படுத்துகிறது

முகவரி..

http://www.salemdistpress.blogspot.com

சனி, 20 ஆகஸ்ட், 2011

படைப்பாளி

படைப்பாளி
படைப்பாளி என்ற பெயரில் எளிய ,அழகிய கவிதைகள் , கருத்துக்களை முன்வைக்கிறார். அழகிய தென்றலைப் போல உள்ள இந்த வலைபக்கத்தை நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

அவரைப் பற்றி அவரே கூறுகிறார்

காட்டுக்கோட்டை..
பெயரைப்போல காடில்லாவிட்டாலும்
அந்த ஊரில் காட்டுக் கொட்டாயில் தான் எங்கள் வீடு..
அளவான குடும்பம்…
ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான்.
தமையன் ஒருவன்.
பள்ளிப்படிப்பு சொந்த ஊரில்..
பட்டப்படிப்பு சென்னை மாப்பட்டினத்தில்..
ஓவியக்கல்லூரி மாணவன்..
முகவரி சொன்னால்…
முதலில் ஓவியன்…
அப்பப்போ.. கவிதை எனும் பெயரில்
சிறு சிறு கிறுக்கல்கள்.. சிற்சில சிந்தனைகள்..
நான் படைப்பென நினைப்பதை..
உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்..

காட்டுக்கோட்டை..

பெயரைப்போல காடில்லாவிட்டாலும்

அந்த ஊரில் காட்டுக்கொட்டாயில்தான் எங்கள் வீடு.

அளவான குடும்பம்

ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான்.

தமையன் ஒருவன்

பள்ளிப்படிப்பு சொந்த ஊரில்..

பட்டப்படிப்பு சென்னைமாப்பட்டிணத்தில்..

ஓவியக்கல்லூரியில் முதுகலை படித்தவன்

முகவரி சொன்னால்

முதலில் ஓவியன்.

அப்பப்போ.. கவிதை,கதை எனும் பெயரில்

சிறு சிறு கிறுக்கல்கள்.. சிற்சில சிந்தனைகள்..

நான் படைப்பென நினைப்பதை

உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்..

பாரீர்!!நான் செம்மையுற உமது கருத்துகள் தாரீர்!!

மாதிரிக்கு ஒரு கவிதை

இன்று சுதந்திர தினமாமே!

கொடி வாங்கலையோ கொடி

ஒரு ரூபாய்தான் அண்ணா

ஒன்னு வாங்கிக்கோங்க

அக்கா ஒன்னு வாங்கிக்கோங்க

காலைல சாப்பிடக்கூட இல்ல

சார் ஒன்னு வாங்கிக்கோங்க

இப்படித்தான் விடிகிறது

ஏழ்மைக்கு இன்றைய தினம்.

எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள்

இந்தியாவுக்கு இன்று சுதந்திர தினமாமே!

வலைப் பக்க முகவரி
http://padaipali.wordpress.com/

புதன், 18 மே, 2011

அநியாயமா மின்சாரம் வீணா போகுது







அநியாயமா மின்சாரம் வீணா போகுது

முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா , மின் தட்டுப்பாட்டை போக்குவதே முதல் வேலை என அறிவித்துள்ளார். அதை நிறைவேற்ற என்ன திட்டங்கள் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.
ஆனால் அதற்க்கு அவர் புதிய மின் திட்டங்களை தீட்ட தேவை இல்லை . நாமும்,அரசாங்கமும் வீணடிக்கும் மின்சாரத்தை மிச்ச்சப்படுத்தினாலே போதும் , தேவை போக மீதி இருக்கும்.


மின் இழப்பு
நம் நாட்டில் 100 யூனிட் மின்சாரம் தயாரித்தால் 70 யூனிட் மட்டுமே நுகர்வோரைப் போய் சேர்வதாக ஒரு கணக்கு சொல்கிறது. 30 யூனிட் மின்சாரம் வீணாகிறது.
உலகிலேயே அதிகமான அளவு இதுதான். துணை மின் நிலையங்களையும், டிரான்ஸ்பார்மர் களையும் நவீனப் படுத்தினால் 10 யூனிட் மட்டுமே இழப்பு ஏற்படும் . பல ஆயிரம்
கோடி ரூபாய் மின் கட்டணம் கூடுதலாக கிடைக்கும். எனவே இதற்க்காக எவ்வளவு செலவு செய்தாலும் ஒரே ஆண்டில் மீதி ஆகிவிடும். மேலும் மின்கம்பிகளை பூமிக்கு அடியில் கொண்டு சென்றாலும் பெருமளவு மின் இழப்பு தவிர்க்கப்படும்.

குண்டு பல்புகளைத் தவிர்ப்போம்

குண்டு பல்புகள் அதிக மின்சாரத்தை வீனடிப்பதுடன்,புவி வெப்பமயமாதலுக்கும் காரணமாகிறது.அதற்க்கு பதிலாக குறைந்த மின்சாரத்தில் எரியும் குழல் விளக்குகளை பயன்படுத்தலாம் .அனைத்து அரசு அலுவலகங்களிலும் உடனடியாக குண்டு பல்ப்புகளை நீக்கிவிட்டு குழல் விளக்குகளை பயன்படுத்தவேண்டும்.இமாச்சலப் பிரதேச அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீடுகளுக்கும் CFL குழல் விளக்குகளை இலவசமாக கொடுத்தது. இதனால் அங்கு 40 சதவீதம் வரை மின் தேவைக் குறைந்துள்ளது. தமிழக அரசும் அவ்வாறு செய்யலாம்.அரசே விளம்பரங்களில் குண்டு பல்புகளை பரிந்துரைக்கிறது என்பது வேறு வேதனை.படத்தைப் பாருங்கள்.

தெரு விளக்குகள்

நம் ஊரில் உள்ள தெரு விளக்குகள் பெரும்பாலும் சோடியம் அல்லது மெர்குரி விளக்குகள்.
இவற்றிற்கு 500 முதல் 2000 வாட்ஸ் வரை மின்சாரம் செலவாகிறது.ஆனால் வெள்ளை நிற ஒளி தரும் LED விளக்குகள் 100 முதல் 200 வாட்ஸ் மட்டுமே செலவாகும்.எனவே இவற்றையும் உடனே மாற்றவேண்டும்.

மின் திருட்டு
அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு சில தொழில் அதிபர்கள் செய்யும் திருட்டால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்ப்படுகிறது.
சமீபத்தில் கூட சங்ககிரி அருகில் ஒரு இரும்புத் தொழிற்ச்சாலையில் 7 கோடி ரூபாய் அளவுக்கு மின்திருட்டை கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே இதற்க்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்.திருட முடியாத அளவுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

கொக்கி போடுதல்
திருவிழா மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு மின்சாரம் இலவசம் என எந்த சட்டமும் இல்லை.யாரும் காசு கொதுட்டு கரண்ட் வாங்குவதும் இல்லை.தமிழர்கள் கண்டுபிடித்த கொக்கி போட்டு திருடும் முறை மூலம் இவர்கள் மின்சாரம் திருடுவதை தடுக்கவேண்டும்.இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்கலாம்.

சூரிய சக்தி
சோலார் சிஸ்டம் எனப்படும் சூரிய சக்தி மின் உபகரணங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் .கல்வி நிறுவனங்கள்,தொழிற்சாலைகள்,அடுக்கு மாடி குடியிருப்புகள் போன்றவற்றிற்கு அனுமதி கொடுக்கும் போதே கண்டிப்பாக சோலார் சிஸ்டம் பொருத்த உத்தரவிட வேண்டும். இதை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.வரிச்சலுகை,மானியம் போல..கர்நாடகாவில் சோலார் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் மக்களுக்கு ஒவ்வொரு கரண்ட் பில்லிலும் ரூ.50 டிஸ்கவுன்ட் தருகிறார்கள்.




ஸ்டார் ரேட்டிங்
மின்சாதனங்களுக்கு அதன் மின்தேவைக்கு ஏற்ப 1 முதல் 5 வரை ஸ்டார் ரேட்டிங் ஐ மத்திய அரசு அளிக்கிறது. 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள பொருட்களை வாங்கினால்
குறைவான மின்சாரமே செலவாகும்.

மேற்கண்ட விசயங்களை செய்தாலே 40 சதவீதம் மின்சாரம் மீதி ஆகும்.இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு புதிதாக ஆரம்பிக்க உள்ள மிந்திட்டங்களின் உற்பத்திக்கு சமமாகும்.
இதை எல்லாம் நிறைவேற்ற துணிச்சலாக முடிவெடுக்கும் முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். அவர் இதை செய்வார் என நம்புவோம்.


எண்ணமும் கருத்தும் மோகன். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.நன்றி.

திங்கள், 11 ஏப்ரல், 2011

தமிழ் சினிமாவில் இது மிருக ஆண்டு







தமிழ் சினிமாவில் இது மிருக ஆண்டு

யாராவது ஜோசியக்காரர் சொன்னாறா
அல்லது ஏதாவது ஒரு படம் ஓடிவிட்ட ராசியா என்று தெரியவில்லை..
எறும்பு முதல் யானை வரை எதாவது ஒரு மிருகத்தின் பெயரில் படம் எடுப்பது அதிகமாகிவிட்டது.
கடந்த ஓராண்டில் வந்த படங்கள், வர இருக்கிற படங்களைப் பாருங்கள்.

சிங்கம்
பெண் சிங்கம்
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்
சிங்கம் புலி

புலி
புலிவேசம்
சிறுத்தை
குள்ளநரிக் கூட்டம்
ஆடுபுலி

வேங்கை
காளை
குங்கும பூவும் கொஞ்சு புறாவும்
அழகர்சாமியின் குதிரை
மைனா
சிவபூஜையில் கரடி
நடுநிசி நாய்கள்
ஆடுபுலி ஆட்டம்
நந்தி
முரட்டுக் காளை (சுந்தர்.சி )
சுறா
சிங்க முகம்



பேசுவது கிளியா

எண்ணமும் கருத்தும் மோகன். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.நன்றி.

புதன், 6 ஏப்ரல், 2011

இலவசமா ... பிச்சையா...!?


என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்.
உங்கள் கருத்தை சொல்லுங்கள்.


தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..)

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.



ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.

இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.

நல்ல வரலாறு படைப்போம்.நன்றி

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அமைச்சர் நேருவின் ஆம்னி பஸ்சில் ‌ 5 கோடி!

Dinamalar - No 1 Tamil News Paper

ஏப்ரல் 05,2011,11:54 IST

திருச்சி: திருச்சியில் அமைச்சர் நேருவின் உறவினர் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் கட்டுக்கட்டாக ரூ.1000 கரன்சிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.











திருச்சிபொன்நகரில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவின் உறவினருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் மாவட்ட ஆர்.டி.ஓ. சங்கீதா தலைமையில் போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் நடத்திய அதிரடி சோதனையில் 5 பைகள் சிக்கின. இந்த பைகளை பிரித்து பார்த்த போது கட்டுக்கட்டாக ரூ. 1000 , 500 கரன்சி நோட்டுகள் சிக்கியதாக கூறப்படுகிறது.










கைப்பற்றப்பட்ட பணத்தினை மதி்ப்பு ரூ. 5 கோடியே, 5 லட்சத்து 27 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்தும் ,மொத்த தொகை எவ்வளவு என்பன குறித்தும் விசா‌ரணை தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் உதயகுமாரின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.








திங்கள், 21 மார்ச், 2011

தேர்தல்: நல்ல தலைவர் யார் ?



இது ஸ்பெக்ட்ரம் காலத்தில் நடக்கும் தேர்தல். நேர்மை , எளிமை, தூய்மை, உண்மை போன்றவை கிலோ என்ன விலை என கேட்கும் தலைவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள். இந்த காலத்திலும் மேலே சொன்ன நேர்மை , எளிமை, தூய்மை, உண்மை போன்றவற்றை கடைபிடிக்கும் தலைவர்கள், உள்ளார்களா என தேடியபோது ஒரு சிலர் தேறினார்கள். அவர்களின் பட்டியலைத் தருகிறேன்.
அவர்களில் சிலர் நேரடி அரசியலில் ஈடுபடாதவர்களாகவும் இருக்கலாம்.
இருந்தாலும் இந்த தேர்தல் நேரத்தில் இருக்கும் ஒரு சில நல்லவர்களை அடையாளம் காட்டும் முயற்ச்சி இது.


.ப.ஜெ.அப்துல் கலாம்
(முதல் பெயராக எழுத இவரை விட்டால் ஆள் இல்லை )


திரு.நல்லக்கண்ணு
திரு. தா.பாண்டியன் ( சில விதிவிலக்குகளுடன் )
திரு .மகேந்திரன் (சிபி ஐ எம்.எல்.ஏ )


செல்வி .பாலபாரதி ( சிபிஎம் எம்.எல். )



சைதை துரைசாமி (அ.தி.மு.க வேட்பாளர் ,கொளத்தூர் தொகுதி,மனிநேய மன்றம் )

வைகோ ( சில விதிவிலக்குகளுடன்)


திரு.டி.ராஜா (இ.கம்யூ மாநிலங்களவை எம்பி , நடப்பு பாராளுமன்ற எம்பிக்களில் மிகவும் ஏழையான எம்பியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.)

திரு.தமிழருவி மணியன் (அரசியல் விமர்சகர்)
திரு.சோ ,அரசியல் விமர்சகர்
இயக்குனர் சீமான் (நாம் தமிழர் இயக்கம்)
இயக்குனர் தங்கர்பச்சான் (அரசியல் விமர்சகர்)
பழ.நெடுமாறன்

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் (எல்காட் தலைவர் )






.சகாயம்
ஐ.ஏ.எஸ் (நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் )



.நாராயணன் கிருஷ்ணன் ,மதுரை (சமூக சேவகர், சிஎன்என் தொலைகாட்சி 2010 ன் உலகின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுத்து உள்ளது.
இவரைப் பற்றி மேலும் அறிய http://www.akshayatrust.org/ என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்)

இப்பொதைக்கு தோன்றியவர்களை குறிப்பிட்டுள்ளேன். உங்களுக்கு தெரிந்த நல்லவர்களின் பெயர்களை கூறுங்கள்.நல்லவர்களின் பட்டியலில் சேர்க்கப்படும்.

குறிப்பு ;
இந்த பதிவை படித்துவிட்டுத் தோழர் விடுதலை அனுப்பிய தகவல்

இப்படியும் ஓரு எம்.எல்.ஏ இருக்க முடியுமா தமிழ்நாட்டில்


இந்த ஆட்சிக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த பத்தாம் தேதி யோடு முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்திட்ட தெம்பில் பலர் உற்சாகத்தோடு தொண்டர்கள் புடைசூழ விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு முன் னாலும் குறைந்தது ஐம்பது, அறுபது பேர் ‘தேவ்டு’ காத்து நிற்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவான நன்மாறனின் அறை மட்டும் ஆள் அரவமற்று அமைதியாய் நிற்கிறது. உள்ளே ஒரு உருவம் ஓடியாடி ஏதோ அவசரத்தில் தன் உடைமைகளை ஒரு பையில் எடுத்து அழுத்திக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தால் நன்மாறன் எம்எல்ஏ.

‘எம்எல்ஏவுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அத கட்சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊழியர் நான். அதற்காக கட்சி 5500 ரூபாய் சம்பளம் தருகிறது. அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதா ரம்” என்று எளிமையாய் சிரிக்கிறார்.

நன்மாறனுக்கு இரண்டு மகன்கள், ஒரு பையன் எம்எஸ்சி படித்துவிட்டு வேலைபார்க்கிறார். இன்னொருவர் பி.ஏ.பட்டதாரி. மனைவி சண்முக வள்ளி நன்மாறனின் உறவினர் வீட் டுப் பெண்!

‘பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்ல குடி இருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்கச் சொல்லி வீட்டு உரிமை யாளர் கேட்டுக்கிட்டார். பத்து வருஷத் துக்கு முன்னாடி வாங்கினது.184 சதுரடி. சின்னதா ஒரு வீடு, இதுதாங்க நம்ம சொத்து’ என்கிறார்.

நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம். தன்னுடைய மகனின் கல்லூரி சேர்ப்புக்காக சென்றபோது, கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு போவதற்குள், அட்மிஷன் முடிந்துவிட்டது. சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியில் தன் மகனைச் சேர்த்துவிட்டு விட்டார். யாரும் தன்னை குறை சொல்லிவிடக் கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன்.

அம்மா, அப்பா: கூலி வேலை மகள் : எம்எல்ஏ


இவரைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித் துக் கொண்டிருந்தார். யாரும் அவரு டன் இல்லை. தனி மனுஷி!

“ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடை யாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க” என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாள மும் இல்லாமல் இருப்பவர்.

‘எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக் கிறாங்க.

சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்’ என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல் லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.

‘உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?’ என்றால், பெரியதாக சிரித்த வர்... ‘ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து’ என்று நம்மை பதற்றப் பட வைக்கிறார்.

கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!

“சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார் கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?” என்று சொல்லும் லீமா ரோஸ், நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?