வியாழன், 28 மே, 2015

சங்கம்‬ வளர்த்த தமிழ்

சங்கம்‬ வளர்த்த தமிழ் 


தமிழில் தொடங்கி காதலும் காமமும் விளையாடி மீண்டும் தமிழிலேயே முடியும் இந்த பாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்களை தவிர யாராலும் எழுத முடியாது . இலைமறைக் காயாக அனுபவியுங்கள்...

படம்: துலாபாரம்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர்கள்:T.M.S, P.சுசீலா

--------------------------------------------------
ஆண் :
சங்கம் வளர்த்த தமிழ்
தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ்
வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!

பெண்:
தென்றலுக்குச் சீதனமாய் தேவன் தந்த தமிழ்க்
கன்று குரல் கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!

ஆண் :சங்கம் வளர்த்த தமிழ்

பெண்:
செவ்வரி யோடிய கண்களி ரண்டினில்
சேலொடு வேலாட

ஆண்:
இரு கொவ்வை இதழ்களும்
கொத்து மலர்களும்
கொஞ்சி மகிழ்ந்தாட

பெண்:
தெய்வ ரதத்தினைச் சேலை மறைத்திட
சிற்றிடை தள்ளாட
நடை சிந்து படித்தவள்
பந்து பிடித்தனள் முந்தி எழுந்தாட

ஆண்:
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்
சிந்து பல கொண்ட தமிழ்
வெல்லும் வெல்லும்

பெண்:
தோட்டத்திலே தென்னை இரண்டு
முற்றித் திரண்டு பக்கம் உருண்டு
கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து

ஆண்:
அதைத் தொட வோடிய
விழியோ டொரு விழிமோதிய கணமே

பெண்:
எனைத் தாக்கித் தகர்த்தவை இரண்டு
பக்கம் உருண்டு முற்றித் திரண்டு
என்னைத் தாங்க அழைத்திட்ட விருந்து!

பெண்:
காலமெனும் ஆற்றினிலே
கையெடுத்து நீந்திவந்து
கோடிமலர் தேடி வந்து வெல்லும் வெல்லும்

ஆண்:
உயர் கோபுரத்தில் ஏறி நின்று
சொல்லும் சொல்லும்

இருவரும்:
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்......

 முத்துராமனும் காஞ்சனாவின் கொஞ்சும் விழிகளும்.. வீடியோவை பாருங்கள்..  
https://www.youtube.com/watch?v=DR4s7Psb-EM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக