சனி, 1 ஆகஸ்ட், 2015

சந்துருவுக்கு என்னாச்சு

சந்துருவுக்கு என்னாச்சு

 - யெஸ்.பாலபாரதி


சிறுவயதில் ஊனமுற்றவர்களை நொண்டி என்றே அழைத்தோம். அவர்கள் ஏதாவது தவறு செய்தால் "மொண்டிக்கு முன்னூறு குசும்பு " என எங்கள் ஊரில் சொல்வார்கள். சற்று வளர்ந்தபின்பு அவர்களை ஊனமுற்றவர்கள் என குறிப்பிட பழகினேன். இன்று "மாற்றுத் திறனாளி" என்ற சொல் சரியானதாக தோன்றுகிறது .

அதுபோலவே 10 ஆம் வகுப்பு படிக்கும் அவர்கள் அறிமுகம் ஆனார்கள். ஏன் அப்படி இருக்கிறார்கள் என நண்பனிடம் கேட்டேன் . அது " ஒம்போது " அப்படித்தான் இருக்கும் என்றான் . அலி என்றும் சொல்வார்கள். விவரம் தெரிந்த பின் திருப்பூரில் சமையல் தொழில் செய்யும் சிலரை சந்தித்தபோது " அரவாணிகள் " என சொல்ல பழகினேன் . தோழி
Living Smile Vidya அவர்களின் " நான் வித்யா " நூலை படித்த போது அவர்கள் மீதான மதிப்பு ஏற்பட்டது , இன்று திருநங்கைகள் என சொல்லும் அளவுக்கு.

அது போலவே சிறுவயதில் மன பாதிப்புக்கு உள்ளானவர்களை லூசு என்றும் , மெண்டல் என்றும் நினைத்தேன். வளர்ந்த பின் அவர் "சற்று மனநலம் பாதித்தவர்" என சொல்ல பழகினேன். ஆனால் இன்று பல்வேறு மரபணு கோளாறுகளால் மனநல பாதிப்பில் குழந்தைகள் பிறப்பது அதிகமாகிவிட்டது. இன்று அவர்களை "சிறப்பு குழந்தைகள் (special children)" என அழைக்கிறோம்(றேன்) . ஒவ்வொன்றிலும் அனுபவம் பெற்ற பிறகே எனக்கு சரியான புரிதல் ஏற்பட்டது .

அதை எல்லோருக்கும் புரிய வைக்கும் ஒரு சிறிய முயற்சி தான் நண்பர் பாலபாரதியின் " சந்துருவுக்கு என்னாச்சு " என்ற இந்த சிறிய நூல். பள்ளிகூட புத்தகத்தில் உள்ள ஒரு பாடத்தின் அளவுதான் இந்த நூல் . ஆனால் கண்டிப்பாக பாட திட்டத்தில் வைக்க வேண்டிய பதிவு . 6 ஆம் வகுப்பு பாட நூலில் வைக்கலாம்.

"சந்துருவுக்கு என்னாச்சு"
- யெஸ்.பாலபாரதி
பாரதி புத்தகாலயம் வெளியீடு
போன் :044-24332924

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக