புதன், 12 ஆகஸ்ட், 2015

மிளிர் கல்

மிளிர் கல்‬



கண்ணகியின் சிலம்பில் இருந்த மாணிக்க கல் தான் கோவலன் கொலைக்கும் , கண்ணகி மதுரையை எரித்ததற்கும், சிலப்பதிகாரம் என்ற காப்பியத்திற்கும் காரணம். 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடந்த ரத்தின கற்கள் வியாபாரம் , கண்ணகி சென்ற வழித்தடங்கள் வழியே பயணிக்கிறது கதை .
அதே நேரத்தில் இன்றைய ரத்தின வியாபாரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் , தமிழகத்தில் கற்கள் கிடைக்கும் இடங்கள் போன்றவற்றை ஒரு பேராசிரியரின் பார்வையில் பதிவு செய்கிறார் ஆசிரியர் இரா. முருகவேள். 

சிலப்பதிகாரத்தின் பல்வேறு சம்பவங்களை எப்படி நடந்திருக்கும் என இரண்டு பேர் விவாதம் செய்வது போல கொண்டு போகிறார் முருகவேள் . கண்ணகி , கோவலன் பெயர் எப்படி வந்திருக்கும் , கண்ணகி ஏன் அந்த பாதை வழியே சென்றாள் , இன்றும் கொங்கு மண்டலத்தில் ரத்தினத்தை தேடி அலையும் மனிதர்கள்,பராசுர நிறுவனங்கள் .. என சிலப்பதிகார காலத்தையும் இன்றைய காலத்தையும் சுவாரஸ்யமாக இணைக்கிறார் ஆசிரியர். ஆர்வம் உள்ளவர்கள் படித்துப் பாருங்கள்.

மிளிர் கல்

இரா. முருகவேள்
பொன்னுலகம் பதிப்பகம்
திருப்பூர்
விலை: ரூ. 200

இணையத்தில் வாங்க....
http://www.panuval.com/milir-kal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக