திங்கள், 11 ஏப்ரல், 2011

தமிழ் சினிமாவில் இது மிருக ஆண்டு







தமிழ் சினிமாவில் இது மிருக ஆண்டு

யாராவது ஜோசியக்காரர் சொன்னாறா
அல்லது ஏதாவது ஒரு படம் ஓடிவிட்ட ராசியா என்று தெரியவில்லை..
எறும்பு முதல் யானை வரை எதாவது ஒரு மிருகத்தின் பெயரில் படம் எடுப்பது அதிகமாகிவிட்டது.
கடந்த ஓராண்டில் வந்த படங்கள், வர இருக்கிற படங்களைப் பாருங்கள்.

சிங்கம்
பெண் சிங்கம்
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்
சிங்கம் புலி

புலி
புலிவேசம்
சிறுத்தை
குள்ளநரிக் கூட்டம்
ஆடுபுலி

வேங்கை
காளை
குங்கும பூவும் கொஞ்சு புறாவும்
அழகர்சாமியின் குதிரை
மைனா
சிவபூஜையில் கரடி
நடுநிசி நாய்கள்
ஆடுபுலி ஆட்டம்
நந்தி
முரட்டுக் காளை (சுந்தர்.சி )
சுறா
சிங்க முகம்



பேசுவது கிளியா

எண்ணமும் கருத்தும் மோகன். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.நன்றி.

புதன், 6 ஏப்ரல், 2011

இலவசமா ... பிச்சையா...!?


என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்.
உங்கள் கருத்தை சொல்லுங்கள்.


தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..)

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.



ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.

இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.

நல்ல வரலாறு படைப்போம்.நன்றி

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அமைச்சர் நேருவின் ஆம்னி பஸ்சில் ‌ 5 கோடி!

Dinamalar - No 1 Tamil News Paper

ஏப்ரல் 05,2011,11:54 IST

திருச்சி: திருச்சியில் அமைச்சர் நேருவின் உறவினர் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் கட்டுக்கட்டாக ரூ.1000 கரன்சிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.











திருச்சிபொன்நகரில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவின் உறவினருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் மாவட்ட ஆர்.டி.ஓ. சங்கீதா தலைமையில் போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் நடத்திய அதிரடி சோதனையில் 5 பைகள் சிக்கின. இந்த பைகளை பிரித்து பார்த்த போது கட்டுக்கட்டாக ரூ. 1000 , 500 கரன்சி நோட்டுகள் சிக்கியதாக கூறப்படுகிறது.










கைப்பற்றப்பட்ட பணத்தினை மதி்ப்பு ரூ. 5 கோடியே, 5 லட்சத்து 27 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்தும் ,மொத்த தொகை எவ்வளவு என்பன குறித்தும் விசா‌ரணை தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் உதயகுமாரின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.