செவ்வாய், 30 அக்டோபர், 2012

இந்து மதம் எங்கே போகிறது

இந்து மதம் எங்கே போகிறது


மத்திய ஆசியாவிலிருந்து சுமார் 2500-3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள் ( பின்னாளில் அந்தணர்கள் என அழைக்கப்பட்டனர்) , இந்தியாவில் பசுவதையை அறிமுகப்படுத்தினர்.


மேலும் அஸ்வமேக யாகம் என்ற பெயரில் ஏராளமான குதிரைகளையும் பலி கொடுத்தனர்.

எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் உயிர்பலி கட்டாயம் கொடுக்கவேண்டும் என மன்னர்களையும்,மக்களையும் நம்ப வைத்தனர்.

பின்னாளில் இந்த உயிர்பலியை பெருமளவிற்கு தடுத்து நிறுத்தியவர் புத்தர். தனது சீடர்களுடன் ஊர் ஊராக சென்று மக்களிடம் பேசி இந்த மூடநம்பிக்கையை கைவிட வைத்தார்.

உயிர்பலிக்கு பதிலாக எலுமிச்சை,பூசணி ஆகியவற்றை (குங்குமம் வைத்து) பலியிடும் முறையை கொண்டுவந்ததும் புத்தர் பெருமானே...   -''அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்'' எழுதிய

''இந்து மதம் எங்கே போகிறது'' - என்ற நூலிலிருந்து.

-நக்கீரன் பதிப்பகம் வெளியீடு. மத்திய ஆசியாவிலிருந்து சுமார் 2500-3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள் ( பின்னாளில் அந்தணர்கள் என அழைக்கப்பட்டனர்) , இந்தியாவில் பசுவதையை அறிமுகப்படுத்தினர்.
மேலும் அஸ்வமேக யாகம் என்ற பெயரில் ஏராளமான குதிரைகளையும் பலி கொடுத்தனர். 
எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் உயிர்பலி கட்டாயம் கொடுக்கவேண்டும் என மன்னர்களையும்,மக்களையும் நம்ப வைத்தனர்.
பின்னாளில் இந்த உயிர்பலியை பெருமளவிற்கு தடுத்து நிறுத்தியவர் புத்தர். தனது சீடர்களுடன் ஊர் ஊராக சென்று மக்களிடம் பேசி இந்த மூடநம்பிக்கையை கைவிட வைத்தார். 
உயிர்பலிக்கு பதிலாக எலுமிச்சை,பூசணி ஆகியவற்றை (குங்குமம் வைத்து) பலியிடும் முறையை கொண்டுவந்ததும் புத்தர் பெருமானே...


-''அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்'' எழுதிய 
''இந்து மதம் எங்கே போகிறது'' - என்ற நூலிலிருந்து.
-நக்கீரன் பதிப்பகம் வெளியீடு.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

அணு விஞ்ஞானி நாராயணசாமி !

அணு விஞ்ஞானி நாராயணசாமி !

முயற்சி செய்தால் முடியாதது இல்லை என்பதற்கு உதாரணம் இவர்..


புதுச்சேரியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.

படித்தது ஆறாம்வகுப்பு..

சரியான வேலை இல்லாததால் புதுவை காங்கிரஸ் கோஷ்டி ஒன்றில் இணைந்தார் ..

படிப்படியாக வளர்ந்து எம்பி ஆனார்...

வேறு ஆள் கிடைக்காததால் மந்திரி ஆனார்...

முக்கால்வாசி அரசியல்வாதிகளின் கதை இதுதானே என்று கேட்காதீர்கள் ...  

இதற்கு பிறகுதான் இருக்கிறது வரலாறு..



கூடங்குளத்தில் தேவையில்லாமல் ஒரு அணு உலையை கட்டிவிட்டு,

''கவன்பிளவில் கால் நுழைத்து ஆப்பசைத்துக் கொண்ட குரங்குதனைப்போல'' மாட்டிக்கொண்ட மத்திய அரசு ,அதை சமாளிக்க சரியான ஆளை தேடியது. அப்பத்தான் கண்ணில் பட்டார் நம்ம நாராயணசாமி...


அணு உலையை ஆறு ரவுண்ட் வந்தார்...

ஆறே மாதத்தில் அணு விசயங்களை கரைத்து குடித்தார்..

இந்தியாவிற்கு புதிய அணு விஞ்ஞானி கிடைத்தார்..

கூடங்குளம் போராட்ட குழுவின் கேள்விகளுக்கு அப்துல்கலாம் முதல் ரஷ்ய விஞ்ஞானிகள் வரை பதில் சொல்ல தடுமாறுகையில் , அசால்ட்டாக சமாளிக்கிறார் அ.வி(அணு விஞ்ஞானி).நாராயணசாமி...


அதுவும் நம்மைப் போன்ற பாமர மக்களுக்கும் புரியும் வகையில், ''இன்னைக்கு உலையில் யுரேனியம் போட்டாச்சு,15 நாள்ல கரண்ட் வந்திரும்னு எதோ அரிசிய உலைல போட்டாச்சு 15 நிமிசத்தில பொங்கிரும்''; ங்கிற மாதிரி எளிமையா சொல்றார் அ.வி.நாராயணசாமி...  

வெறும் ஆறாவது மட்டும் படித்து , சொந்த முயற்ச்சியால் அணு விஞ்ஞானியாக மாறிய நாராயணசாமியை,  விரைவில் இந்திய அணுசக்தி துறை தலைவராக வருவதற்கு வாழ்த்துங்கள்.. 

எனவே நாராயணசாமியை விட்டு பதில் சொல்வது , போராட்டக் குழுவினரை அவமானப்படுத்துவதற்காக என யாரும் நினைக்கவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

ரா.கி.ரங்கராஜன் மறைவு

ரா.கி.ரங்கராஜன் மறைவு

பிரபல எழுத்தாளரும், குமுதம் இதழின் ஆரம்ப கால தூண்களில் ஒருவருமான ரா.கி.ரங்கராஜன் சென்னையில் நேற்று [18.8.2012] காலமானார். தமிழ் எழுத்து உலகிற்கும், என்னை போன்ற வாசகர்களுக்கும் பேரிழப்பாகும்.


என் புத்தக ஆர்வத்தை துவக்கி வைத்தவர் ..

என்னுடைய புத்தக ஆர்வத்திற்கும், இன்று  வீட்டில்  சுமார் 500 நூல்களுடன் ஒரு மினி நூலகம் அளவிற்கு நூல்கள் வைத்திருப்பதற்கும் ரா.கி.ரங்கராஜன் ஐயா ஒரு முக்கிய காரணம் . 15 ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா சேலம் கன்னங்குறிச்சி அரசு பள்ளியில் பணிபுரிந்த போது , நூலகத்தில் இருந்து ஒரு புத்தகம் கொண்டுவந்தார். அதன் பெயர் பட்டாம்பூச்சி.


 ஹென்றி ஷாரியர் என்பவர் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்திருந்தார் ரா.கி.ர .
எதேச்சையாக அதை படிக்க துவங்கிய என்னால் ,முழுமையாக படிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. படிக்கும் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கும் அந்த நூல் பல நாட்கள் மனதை ஆக்கிரமித்திருந்தது. அதன் பாதிப்பிலேயே புத்தகங்களை தேடி தேடி வாங்க ஆரம்பித்தேன் .


பொன்னியின் செல்வன் போல தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த நூல்களில் ஒன்று பட்டாம்பூச்சி. படிக்கவும்,பாதுகாக்கவும்,பரிசளிக்கவும் ஒரு பட்டாம்பூச்சியை இன்றே வாங்குங்கள். அதுதான் அந்த மனிதருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.

பட்டாம்பூச்சி
மயிர் கூச்செறிய வைக்கும் மானிட சாசனம் -ஹென்றி ஷாரியர்

தமிழில் ரா.கி.ரங்கராஜன்
விலை . 250.00

நர்மதா பதிப்பகம்
No 10 1st Floor, Pondy Bazaar Adjacent To T Nagar Head Post Office, Nana Street, T Nagar, Chennai - 600017

ஆன்லைனில் வாங்க ...
http://discoverybookpalace.com/products.php?product=PattamPoochi%252dRa.Ki.Rangarajan%252dbuy-tamil-books

எண்ணமும் எழுத்தும்

மோகன்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

ஹெல்மெட்டும் எம்பெருமான் முருகனும்.. !

வாரியார் சுவாமிகள் ஸ்டைலில் படிக்கவும்..



HEL என்றால் நரகம்...

MET என்றால் சந்திப்பது....

HELMET போடாமல் வண்டி ஓட்டினால் நரகத்துக்குத் தான் போவாய் என்று அர்த்தம் ...


HELMET போட்டுக்கொண்டு வண்டி ஒட்டுங்கள்..

உனக்கான நேரம் வரும்போது எம்பெருமான் முருகன் உங்களை சொர்க்கத்திற்க்கே அழைத்துக்கொள்வான்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

காளமேகப் புலவரின் கிண்டல் பாடல்

காளமேகப் புலவரின் கிண்டல் பாடல்

மோர்காரியின் மோரில் தண்ணீர் அதிகம் இருப்பதாக கிண்டல் செய்து கவி காளமேகப் புலவர் பாடிய சிலேடைப் பாடல் ...


கார்என்று பேர்படைத்தாய்


                 ககனத்து உறும்போது

நீர்என்று பேர்படைத்தாய்

                நெடும்தரையில் வந்ததன்பின்

வார்ஒன்றும் மென்முலையார்

                ஆய்ச்சியர்கை வந்ததன்பின்

மோர்என்று பேர்படைத்தாய்

                முப்பெரும் பெற்றாயே...!

புதன், 23 மே, 2012

என் பிரண்ட போல யாரு மச்சான் ....

என் பிரண்ட போல யாரு மச்சான் ....


கடந்த வாரம் எதேச்சையாக ராஜசேகரின் போன் நம்பர் கிடைத்தது. பேசியதும் பயங்கர சந்தோசம் ஆகிவிட்டான். இரண்டு நாட்களுக்கு பிறகு அவன் கூப்பிட்டான். நம்ம பசங்க எல்லாம் பாப்பியா, என்ன பண்றாங்க, ஒரு கெட்-டூ-கெதர் மாதிரி பண்ணலாம் என்றான். எங்கள் யாகூ க்ரூப்பில் அதைப் பற்றி எழுதினான். அதற்க்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் . மெயில் பக்கமே நிரம்பிவிட்டது.


நாங்கள் +2 முடித்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும்கூட என் பள்ளித் தோழர்கள் தான் நண்பர்களாக உள்ளனர். இன்றும்கூட எல்லோரது பெயரும் நினைவில் உள்ளது. சேலம் ராமக்ரிஷ்ணாவில் படித்த நாட்கள் ஒரு பொற்காலம். அதுவும் +1 ,+2  படித்த நாட்கள். அதே பள்ளியில் 10th முடித்து விட்டு +1 சேர்ந்தோம். 39  மாணவர்கள், 21 மாணவிகள். 



முதல் நாள் டால் பிசிக்ஸ் சார் ( சுப்பிரமணியம்) சார் பேசியது நினைவில் உள்ளது. நல்லா படிக்காவிட்டால்  எதிர்காலத்தில் பள்ளிக்கு எதிரில் உள்ள குட்டிச் சுவரில் அமர்திருப்பீர்கள், அப்போது வருந்துவீர்கள் என்றார். பள்ளி முடியும் வரை அடிக்கடி சொல்லுவார். ஆனால் எங்கள் செட்டில் இருந்த 39 பேரில் சுமார் 15 பேர் BE,ME என படித்தது எங்களுக்கே அதிசயம். ஏனென்றால் இன்று வேண்டுமானால் வருவோர்,போவோர் எல்லாம் BE படிக்கிறார்கள். ஆனால் நாங்கள் படித்த 95 களில் அதிகபட்சம் 2,3 பேர் படிப்பார்கள் என நினைத்தோம். TP சார் கேட்டால் சந்தோசப் படுவார்.



 
ஞாபகம் வருதே...


நானும் ,யாசரும் ஒரு மழை நாளில் பன்னீர் வீட்டுக்கு போனது

தினேஷ் ரேடியோ கொண்டுவந்து கிரிகெட் கமெண்ட்ரி கேட்கும் பொது , டப் சாரிடம் மாட்டிக்கொண்டது,

நான் போர்டில் ZOO இயல் என எழுதிவைக்க , ZOO மிஸ் என் பேரை மோ GUN என எழுதியது

பாட்டணி சார் சுபாஷைப் பார்த்து ஏண்டா சிரிக்கிற என கேட்டதற்கு ,என் மூஞ்சியே அப்படித்தான் சார் என அவன் சொன்னது

காசி, நான் ,யாசர் மூவரும் என் பழைய விஜய் சூப்பரில் சினிமாவிற்கு போனது

தமிழ் தேர்வில் எழுதிய சிறுகதையில் '' பட்டிக்காட்டான் காசியும் ,பாகலும் (பாகல்பட்டி மணிகண்டன் ) மிட்டாய் கடையைப் பார்த்தது போல'' என நான் எழுத சண்முகவடிவு டீச்சர் அதை எல்லோருக்கும் படித்து காட்டியது


கிரியும் நானும் சினிமா புதிர் விளையாடியது, ராஜேஸ்குமார் நாவல் படித்தது

சம்பத் சாரிடம் கணக்கு டியூசன் படித்தது

எட்டணா டியூப் ஐஸ் வாங்கி அதை இரண்டாக்கி சாப்பிட்டது

பத்தே ரூபாயில் பர்த்டே ட்ரீட் கொடுத்தது

ராஜசேகரிடம் அனுபவக் கதை கேட்பது...

அருணாச்சலம் சாருடன் போன கொடைக்கானல் டூர் ( போட்டோவிற்கு காசு கொடுத்தவர்களை மட்டுமே போட்டோ எடுத்தான் என் நண்பன் )

எல்லோருடைய டிபன் பாக்ஸ்-ஐயும் உரிமையோடு ஒப்பன் பண்ணும் அருண்.....

ZOO ப்ராக்டிகலுக்கு எனக்கு சிக்கன் சைசில் தவளை கொண்டுவந்து கொடுத்த உலகநாதன்...
 
இன்னும் முஸ்தாக்,ராஜ்குமார்,வெள்ளாலப்பட்டியான், கேர்ள்ஸ்......

எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம்.என்னை போலவே ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கும்.



வாருங்கள் நண்பர்களே நம் பள்ளி காலத்து கனவுகள்,காதல்,நட்பு,தோழிகள்,வாத்தியார்,ஸ்ட்ரைக்,டூர் .... எல்லாம் மீண்டும் ஒரு முறை பேசலாம்.....

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

கருணாநிதிக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..












கருணாநிதிக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...



புத்தாண்டு அன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு திரைப் படங்கள் என தனது கலைஞர் டிவியில் ( சித்திரை திருநாள்!) வழங்கும் கலைஞர் கருணாநிதிக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!



தமிழர்களுக்காக ,தமிழ் புத்தாண்டு அன்று துவங்கப்பட்ட சன் டிவியின் தமிழ் மாலை இன்று 20 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கலைஞர் பேரன் கலாநிதி மாறனுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!



கருணாநிதி பேரன் உதயநிதி ஸ்டாலின் , கதாநாயகனாக நடிக்கும் ''ஒரு கல் ஒரு கண்ணாடி '' திரைப்படம் , அவர் நடிக்கும் முதல் படம் என்பதால் ,நல்ல நாள் பார்த்து தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுகிறார்கள். கருணாநிதி பேரன் உதயநிதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.



எனவே தலைவர் கலைஞர் வழியில் , அனைத்து திமுக தொண்டர்களும்,பொதுமக்களும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை கொண்டாடுங்கள். வாழ்த்துக்கள்...

சனி, 7 ஜனவரி, 2012

மோகன் விருதுகள் 2011


மோகன் அவார்ட்ஸ் 2011

சினிமா விருதுகள் பல்வேறு காரணங்கள் , தகுதிகள்,வியாபார ஒப்பந்தங்கள் என பல விசயங்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகின்றன. இருந்தாலும் நம்ம மனசுக்கு புடிச்சது அப்படின்னு ஒன்னு இருக்கும்ல. அதன் அடிப்படையில் எனக்கு பிடித்தவைகளின் பட்டியல் , இரண்டாம் ஆண்டாக இதோ....

சிறந்த படம் - ஆடுகளம், தெய்வதிருமகள் , எங்கேயும் எப்போதும்.
கதை- பாஸ்கர் சக்தி - அழகர்சாமியின் குதிரை
திரைகதை- சரவணன் - எங்கேயும் எப்போதும்
வசனம்- சரவணன்- எங்கேயும் எப்போதும்
சமுத்திரகனி - போராளி
இயக்கம் - வெற்றிமாறன் - ஆடுகளம்
விஜய் - தெய்வ திருமகள்


ஒளிபதிவு - வேல்ராஜ் - எங்கேயும் எப்போதும்
படத்தொகுப்பு - கிஷோர் - எங்கேயும் எப்போதும்,ஆடுகளம்
இசை - ஜி.வி . பிரகாஷ்குமார் - தெய்வ திருமகள்,ஆடுகளம்
பாடல் - பிறை தேடும் இரவிலே - செல்வராகவன்- மயக்கம் என்ன
சாரகாத்து வீசும்போது - வைரமுத்து- வாகை சூட வா
என்னமோ ஏதோ - மதன் கார்க்கி - கோ
பாடகர்- எஸ் .பி.பாலசுப்ரமணியம்- யம்மா யம்மா - ஏழாம் அறிவு
பாடகி - சைந்தவி - பிறை தேடும் - மயக்கம் என்ன
சுசானே - மழை வரும் - வெப்பம்


சிறந்த நடிகர்- விஷால் - அவன் இவன்
விக்ரம்- தெய்வ திருமகள்
தனுஷ் - ஆடுகளம்
சிறந்த நடிகை - அஞ்சலி - எங்கேயும் எப்போதும்
நகைச்சுவை நடிகர் - சந்தானம் - வானம், தெய்வத் திருமகள்
குணசித்திர நடிகர் - ஜெயபாலன்- ஆடுகளம்
குணச்சித்திர நடிகை - சரண்யா - வானம்


கலை - தோட்டா தாரணி - 7 ஆம் அறிவு
குழந்தை நட்சத்திரம் - சாரா - தெய்வத் திருமகள்
பெயர் தெரியாத 2 சிறுவர்கள் - வாகை சூட வா
தமிழ் சினிமாவின் சிறந்த அப்பா ,அம்மா - சிறப்பு விருது - இளவரசு , சரண்யா