வியாழன், 28 மே, 2015

நகைக் கடை மோசடி..

நகைக் கடை மோசடி.. 


1.ரேட் கார்டு பார்த்து நகை வாங்குங்கள் .இல்லை என்றால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் - பிரபு , கல்யாண் ஜுவெல்லர்ஸ்

2.கல் நகைகளுக்கு சேதாரம் 12 சதவீதம் போடுகிறார்கள் . ஆனால் கல்லுக்கு 10 சதவீதம் கழித்து கொள்கிறார்கள். உங்களுக்கு சேதாரம் 2 % மட்டுமே – நடிகை சரண்யா , ஸ்ரீ குமரன் ஜுவல்லரி

3.செய்கூலி , சேதாரம் , கல்லுக்கு தள்ளுபடி எல்லாமே கதை. கல் எடை நீக்கி தங்கத்துக்கு மட்டுமே விலை – கஜானா ஜுவல்லரி 

4.சேட்டு நகை கடைங்க கிப்ட் காட்டி மயக்குவாங்க . கேரளா கடைக்காரங்க சவ்கரியமா வந்து போக பெரிய கடை ன்னு சொல்லுவாங்க . ஆனா பாரம்பரியம் , கைராசி , நம்பிக்கை இதெல்லாம் தான் வேணும். – சுகாசினி மணிரத்னம் , சேலம் AVRஜுவெல்லரி 

5.செய்கூலி , சேதாரம் இல்லை. குறைந்த பட்ச மேக்கிங் சார்ஜ் மட்டுமே. மற்ற கடைகளில் நகை வாங்கி ஏமாறாமல் இருக்க ‘’ தங்கம் வாங்குவது எப்படி “ என்ற புத்தகம் எங்கள் கடையில் இலவசமாக கிடைக்கும் – லலிதா ஜுவல்லரி 

6.இது எல்லாமே பொய் . நேரடியாக தங்கத்தின் விலையிலேயே நகைகளை விற்கிறோம். – சுப் ஜுவல்லரி ( ராஜேஷ் கோல்ட் எக்ஸ்போர்ட்ஸ் )

இவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் எல்லோருமே பிராடு எனத் தெரிகிறது. எனவே அந்த காலம் போல பாரம்பரிய நகை ஆசாரிகளிடம் ஆர்டர் கொடுத்து நகை வாங்க வேண்டியது தான்....!

சங்கம்‬ வளர்த்த தமிழ்

சங்கம்‬ வளர்த்த தமிழ் 


தமிழில் தொடங்கி காதலும் காமமும் விளையாடி மீண்டும் தமிழிலேயே முடியும் இந்த பாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்களை தவிர யாராலும் எழுத முடியாது . இலைமறைக் காயாக அனுபவியுங்கள்...

படம்: துலாபாரம்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர்கள்:T.M.S, P.சுசீலா

--------------------------------------------------
ஆண் :
சங்கம் வளர்த்த தமிழ்
தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ்
வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!

பெண்:
தென்றலுக்குச் சீதனமாய் தேவன் தந்த தமிழ்க்
கன்று குரல் கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!

ஆண் :சங்கம் வளர்த்த தமிழ்

பெண்:
செவ்வரி யோடிய கண்களி ரண்டினில்
சேலொடு வேலாட

ஆண்:
இரு கொவ்வை இதழ்களும்
கொத்து மலர்களும்
கொஞ்சி மகிழ்ந்தாட

பெண்:
தெய்வ ரதத்தினைச் சேலை மறைத்திட
சிற்றிடை தள்ளாட
நடை சிந்து படித்தவள்
பந்து பிடித்தனள் முந்தி எழுந்தாட

ஆண்:
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்
சிந்து பல கொண்ட தமிழ்
வெல்லும் வெல்லும்

பெண்:
தோட்டத்திலே தென்னை இரண்டு
முற்றித் திரண்டு பக்கம் உருண்டு
கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து

ஆண்:
அதைத் தொட வோடிய
விழியோ டொரு விழிமோதிய கணமே

பெண்:
எனைத் தாக்கித் தகர்த்தவை இரண்டு
பக்கம் உருண்டு முற்றித் திரண்டு
என்னைத் தாங்க அழைத்திட்ட விருந்து!

பெண்:
காலமெனும் ஆற்றினிலே
கையெடுத்து நீந்திவந்து
கோடிமலர் தேடி வந்து வெல்லும் வெல்லும்

ஆண்:
உயர் கோபுரத்தில் ஏறி நின்று
சொல்லும் சொல்லும்

இருவரும்:
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்......

 முத்துராமனும் காஞ்சனாவின் கொஞ்சும் விழிகளும்.. வீடியோவை பாருங்கள்..  
https://www.youtube.com/watch?v=DR4s7Psb-EM

சனி, 2 மே, 2015

உமர் முக்தார்

உமர் முக்தார் - நாவலர் ஏ.எம்.யூசுப்

[விலை ரூ.150 ]

கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த போராளிகளில் ஒருவர். இத்தாலி அடிமைப் படுத்தி வைத்திருந்த லிபியாவை மீட்க ஆயுதம் ஏந்திய போது இவருக்கு வயது 72. குழந்தைகளுக்கு குர்ஆன் கற்பிக்கும் எளிய ஆசிரியரான உமர் முக்தார் முசோலினியின் அட்டூழியத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்தது வீர வரலாறு . 



              [உமர் முக்தார் கைது செய்யப்பட்ட போது எடுத்த படம் ]
 
1985 இல் இந்த நூல் வெளிவந்த போது ஒரு இரவு முழுவதும் தூங்காமல் படித்ததாக கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.நான் படித்த போதும் அப்படித்தான் . அந்த அளவுக்கு எளிமையான விறுவிறுப்பான எழுத்துநடை நாவலர் ஏ.எம்.யூசுப் அவர்களுடையது. தற்போது சாஜிதா புக் சென்டர் மறுபதிப்பாக வெளியிட்டுள்ள இந்த நூல் அவசியம் படிக்கப் பட வேண்டியது . உமர் முக்தாரின் வரலாறு சினிமாவாக வந்திருந்தாலும் படிக்கும் போது கிடைக்கும் அனுபவம் தனி....


நூலை வாங்க ...

சாஜிதா புக் சென்டர்
248, தம்பு செட்டி தெரு,
மண்ணடி,
சென்னை - 600001.
போன் : 044-25224821.
email : shajithabookcentre@yahoo.com

இலக்கிய சோலை பதிப்பகமும் இந்த நூலை ( பாலைவன சிங்கம் உமர் முக்தார் என்ற பெயரில் ) பதிப்பித்துள்ளது. இதை ஆன்லைனில் வாங்க ,

 https://www.nhm.in/shop/100-00-0001-491-1.html