செவ்வாய், 26 ஏப்ரல், 2016

வாஸ்கோடகாமா‬

வரலாறு முக்கியம் அமைச்சரே - 2


வாஸ்கோடகாமா‬


இவர்தான் இந்தியாவை கண்டுபிடித்தார். அவர் வந்து இறங்கிய இடம் கள்ளிக்கோட்டை ( கோழிக்கோடு ) . நமக்கு பள்ளியில் சொல்லிக்கொடுத்தது இதுதான். மேலும் அவரை கவுரவப் படுத்தும் வகையில் கோவாவின் ஒரு பகுதிக்கு வாஸ்கோடகாமா என பெயரிட்டுள்ளோம் .

1400-1500 களில் உலகில் மிகவும் செல்வ செழிப்போடு இருந்த நாடு இந்தியா. மிளகு, ஏலக்காய் , தங்கம் , நவரத்தினங்கள் , ஆடைகள் ... என இந்திய பொருட்கள் மீது ஐரோப்பியர்களுக்கு அதிக மோகம். பட்டு பாதை வழியாக சீனர்களும் , மத்திய தரைக்கடல் வழியே கிரேக்கர்களும் இந்திய பொருட்களை அங்கு கொண்டுபோய் விற்பனை செய்தனர். ஆனால் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது . இந்த பாதை வழியாக ஐரோப்பியர்கள் நேரடியாக இந்தியா சென்று வணிகம் செய்ய அனுமதி இல்லை. எனவே கடல் வழியே இந்தியா செல்லும் வழியை கண்டுபிடிக்க போர்சுகல் , ஸ்பெயின் , இங்கிலாந்து மன்னர்கள் முடிவு செய்தனர். மாலுமிகளுக்கு ஏராளமான பணம் கொடுத்து தேட சொன்னார்கள்.

100 ஆண்டு காலம் ஏராளமானோர் முயன்றனர். கடைசியாக 20.5.1498 அன்று கோழிகோடு வந்து சேர்ந்தார் வாஸ்கோடகாமா . அந்த பகுதியை ஆண்ட மன்னர் அவரை வரவேற்று விலைமதிப்பற்ற பொருட்களை பரிசாக அளித்தார். நாடு திரும்பிய அவன் 3 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்து கண்ணனூர் அருகே வணிகத்தளம் அமைத்தான். சிறிது சிறிதாக சில பகுதிகளை ஆக்கிரமித்தான் . எதிர்த்தவர்களை கொலை செய்தான். கோபமுற்ற மன்னர் அவனையும் அவன் ஆட்களையும் அடித்து துரத்தினார். சில நூறு போர்ச்சுகீசியர்கள் இறந்தனர். மீண்டும் சில ஆண்டுகள் கழித்து ஒரு பெரும் படையுடன் வந்து போர்த்துகீசிய காலனியை இந்தியாவில் உருவாக்கினான். பின்னாளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை சுரண்டியதற்கும் இவன்தான் காரணம்.

எனவே இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா என ஐரோப்பிய பள்ளிகளில் வேண்டுமானால் பெருமையாக் சொல்லி தரலாம் . நமக்கு பெருமை இல்லை. ஏனெனில் அவன் வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கம் , அரேபியா, சீனா, சுமத்திரா என கடல் வணிகம் செய்தவர்கள் நாம். !

‪‎வரலாறு‬ முக்கியம் அமைச்சரே – 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக