சனி, 21 செப்டம்பர், 2013

பஞ்சாப்புல மண்ணு எடுத்து

பஞ்சாப்புல மண்ணு எடுத்து
சிந்து நதியின் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை ..
இது பொம்மை இல்ல பொம்மை இல்ல உண்மை..

அலுங்காம ஜெயிக்க வச்சது
அஸ்ஸாமோட  மண்ணுங்க -ஆனா
ஆட்டுவிப்பது எல்லாம் அந்த
அமேதி தொகுதி அன்னைங்க ..

கண்ணழகு செஞ்சதெல்லாம்
ஆக்ஸ்போர்டு மண்ணுங்க..
கையெழுத்து போட்டதெல்லாம்
ரிசர்வ் பேங்கு மண்ணுங்க..

வாயழகு செஞ்சதெல்லாம்
டெல்லியோட மண்ணுங்க - அதுல
திண்டுக்கல்லு பூட்டால
பூட்டிவச்சது யாருங்க..

புத்தி செய்யும் மண்ணுக்கு
சுத்தி சுத்தி வந்தேங்க..
இத்தாலியில் மண்ணெடுத்து
புத்தி செஞ்சேன் பாருங்க..

பூமியெல்லாம் மண்ணெடுத்து
பொம்மை செஞ்சேன் நானுங்க
பாவிமகன் களிமண்ணா போனது
யாரு குத்தங்க ..

(பஞ்சாப்புல மண்ணு எடுத்து )