செவ்வாய், 24 ஜூலை, 2012

காளமேகப் புலவரின் கிண்டல் பாடல்

காளமேகப் புலவரின் கிண்டல் பாடல்

மோர்காரியின் மோரில் தண்ணீர் அதிகம் இருப்பதாக கிண்டல் செய்து கவி காளமேகப் புலவர் பாடிய சிலேடைப் பாடல் ...


கார்என்று பேர்படைத்தாய்


                 ககனத்து உறும்போது

நீர்என்று பேர்படைத்தாய்

                நெடும்தரையில் வந்ததன்பின்

வார்ஒன்றும் மென்முலையார்

                ஆய்ச்சியர்கை வந்ததன்பின்

மோர்என்று பேர்படைத்தாய்

                முப்பெரும் பெற்றாயே...!