வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

முகமது ஹாரிஸ்

இன்று - ஆகஸ்ட் 22


*சென்னை நகரம் உருவான நாள் ( 22.8.1639 )
*BBC தொலைக்காட்சி தொடங்கப் பட்ட நாள்
*ஜெயா தொலைக்காட்சி  தொடங்கப் பட்ட நாள்
*பழம்பெரும் நடிகர் TS பாலையா பிறந்தநாள்
*நடிகர் சிரஞ்சீவி பிறந்த நாள்


இந்த சிறப்பு வாய்ந்த நாளில் பிறந்த நாள் காணும் தொழிலதிபர், காந்தியவாதி , சிந்தனையாளர், எங்கள் அட்மின் நண்பர் முகமது ஹாரிஸ்  அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.



குறிப்பு 1 : கடும் வேலைப் பணி காரணமாக அண்ணார் பேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதால் அவரை வாட்ஸ் அப்பில் வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்த விரும்புபவர்களுக்கு நெம்பர் இன்பாக்ஸில் வழங்கப்படும்.

குறிப்பு 2 : அவர் கடந்த ஆண்டும் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடினார் என்பது குறிப்பிடத் தக்கது.!!!

புதன், 12 ஆகஸ்ட், 2015

மிளிர் கல்

மிளிர் கல்‬



கண்ணகியின் சிலம்பில் இருந்த மாணிக்க கல் தான் கோவலன் கொலைக்கும் , கண்ணகி மதுரையை எரித்ததற்கும், சிலப்பதிகாரம் என்ற காப்பியத்திற்கும் காரணம். 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடந்த ரத்தின கற்கள் வியாபாரம் , கண்ணகி சென்ற வழித்தடங்கள் வழியே பயணிக்கிறது கதை .
அதே நேரத்தில் இன்றைய ரத்தின வியாபாரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் , தமிழகத்தில் கற்கள் கிடைக்கும் இடங்கள் போன்றவற்றை ஒரு பேராசிரியரின் பார்வையில் பதிவு செய்கிறார் ஆசிரியர் இரா. முருகவேள். 

சிலப்பதிகாரத்தின் பல்வேறு சம்பவங்களை எப்படி நடந்திருக்கும் என இரண்டு பேர் விவாதம் செய்வது போல கொண்டு போகிறார் முருகவேள் . கண்ணகி , கோவலன் பெயர் எப்படி வந்திருக்கும் , கண்ணகி ஏன் அந்த பாதை வழியே சென்றாள் , இன்றும் கொங்கு மண்டலத்தில் ரத்தினத்தை தேடி அலையும் மனிதர்கள்,பராசுர நிறுவனங்கள் .. என சிலப்பதிகார காலத்தையும் இன்றைய காலத்தையும் சுவாரஸ்யமாக இணைக்கிறார் ஆசிரியர். ஆர்வம் உள்ளவர்கள் படித்துப் பாருங்கள்.

மிளிர் கல்

இரா. முருகவேள்
பொன்னுலகம் பதிப்பகம்
திருப்பூர்
விலை: ரூ. 200

இணையத்தில் வாங்க....
http://www.panuval.com/milir-kal

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

ஒரு ‪சோலாபூரி‬ 80 ரூபாய்

ஒரு சோலாபூரி‬ 80 ரூபாய் 


சேலத்தில் உள்ள பிரபல சைவ ஓட்டலில் சோலாபூரி சாப்பிட்டேன்.சோலாபூரி என்பது 3 பூரிகள் சேர்ந்த அளவிற்கு சற்று பெரிய பூரி . சிறிய கப்பில் சென்னா மசாலாவும் சிறிது சட்னியும் குடுத்தார்கள். பிறகு ஒரு வெஜ் தோசை , ஒரு காபி . 190 ரூபாய் பில் , 10 ரூபாய் டிப்ஸ்.



சோலாபூரி 80 ரூபாய் போட்டிருந்தார்கள். + டேக்ஸ் தனி . இந்த ஓட்டலுக்கு ஒரு பூரிக்கு என்ன செலவாகும் என தெரிந்து கொள்ள விரும்பினேன். சமையல் நிபுணர்களிடம் விசாரித்தபோது ஒரு கிலோ மாவில் 15 சோலாபூரிகள் தயாரிக்கலாம். 15 சோலாபூரிக்கு சுமார் 750 கிராம் சுண்டல் , 400 மிலி எண்ணெய் மற்றும் தேவையான மசாலா பொருட்கள் மற்றும் எரிபொருள் சேர்ந்து 200 ரூபாய் செலவாகிறது. 

அதே நேரத்தில் பெரிய ஓட்டல் என்பதால் சம்பளம் , வாடகை மற்றும் நிர்வாக செலவுகள் 15 பூரிகளுக்கு அதே 200 ரூபாய் செலவாகும் . மொத்தம் 400 ரூபாய் அசல் ஆகிறது . விற்பனை செய்வது 80*15 = 1200ரூபாய்க்கு . அதாவது அசலைவிட 2 மடங்கு லாபம் . சராசரியாக 100 ரூபாய் பில்லில் 33 ரூபாய் அசல் , 67 ரூபாய் லாபம்.

சேலத்தில் என்று இல்லை . இன்று எல்லா பிரபல சைவ ஓட்டல்களும் நிறைய கிளைகளை நகரங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் திறந்து கொண்டே இருக்கிறார்கள் . ஒவ்வொரு கிளைக்கும் 50 லட்சம் முதல் ஒரு கோடி செலவாகிறது . எனவே எல்லா பெரிய ஓட்டல்களுமே இந்த 33%+67% பார்முலாவை கடைபிடிக்கின்றன.

சனி, 1 ஆகஸ்ட், 2015

சந்துருவுக்கு என்னாச்சு

சந்துருவுக்கு என்னாச்சு

 - யெஸ்.பாலபாரதி


சிறுவயதில் ஊனமுற்றவர்களை நொண்டி என்றே அழைத்தோம். அவர்கள் ஏதாவது தவறு செய்தால் "மொண்டிக்கு முன்னூறு குசும்பு " என எங்கள் ஊரில் சொல்வார்கள். சற்று வளர்ந்தபின்பு அவர்களை ஊனமுற்றவர்கள் என குறிப்பிட பழகினேன். இன்று "மாற்றுத் திறனாளி" என்ற சொல் சரியானதாக தோன்றுகிறது .

அதுபோலவே 10 ஆம் வகுப்பு படிக்கும் அவர்கள் அறிமுகம் ஆனார்கள். ஏன் அப்படி இருக்கிறார்கள் என நண்பனிடம் கேட்டேன் . அது " ஒம்போது " அப்படித்தான் இருக்கும் என்றான் . அலி என்றும் சொல்வார்கள். விவரம் தெரிந்த பின் திருப்பூரில் சமையல் தொழில் செய்யும் சிலரை சந்தித்தபோது " அரவாணிகள் " என சொல்ல பழகினேன் . தோழி
Living Smile Vidya அவர்களின் " நான் வித்யா " நூலை படித்த போது அவர்கள் மீதான மதிப்பு ஏற்பட்டது , இன்று திருநங்கைகள் என சொல்லும் அளவுக்கு.

அது போலவே சிறுவயதில் மன பாதிப்புக்கு உள்ளானவர்களை லூசு என்றும் , மெண்டல் என்றும் நினைத்தேன். வளர்ந்த பின் அவர் "சற்று மனநலம் பாதித்தவர்" என சொல்ல பழகினேன். ஆனால் இன்று பல்வேறு மரபணு கோளாறுகளால் மனநல பாதிப்பில் குழந்தைகள் பிறப்பது அதிகமாகிவிட்டது. இன்று அவர்களை "சிறப்பு குழந்தைகள் (special children)" என அழைக்கிறோம்(றேன்) . ஒவ்வொன்றிலும் அனுபவம் பெற்ற பிறகே எனக்கு சரியான புரிதல் ஏற்பட்டது .

அதை எல்லோருக்கும் புரிய வைக்கும் ஒரு சிறிய முயற்சி தான் நண்பர் பாலபாரதியின் " சந்துருவுக்கு என்னாச்சு " என்ற இந்த சிறிய நூல். பள்ளிகூட புத்தகத்தில் உள்ள ஒரு பாடத்தின் அளவுதான் இந்த நூல் . ஆனால் கண்டிப்பாக பாட திட்டத்தில் வைக்க வேண்டிய பதிவு . 6 ஆம் வகுப்பு பாட நூலில் வைக்கலாம்.

"சந்துருவுக்கு என்னாச்சு"
- யெஸ்.பாலபாரதி
பாரதி புத்தகாலயம் வெளியீடு
போன் :044-24332924