வியாழன், 16 ஜூலை, 2015

ஆடி பிறப்பு

 ஆடி பிறப்பு


"ஆடியிலே கட்டிக்கிட்டா
சித்திரைக்கு புள்ள வரும்
ஆகாது ஆகாது மச்சானே ....
இது தோதான தை மாசம் வச்சானே "


அதாகப்பட்டது புது மாப்பிள்ளை , புது பொண்ணுங்களே... சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்ம ஊரில் கோடை காலங்களில் குறிப்பாக சித்திரை மாதத்தில் காலரா போன்ற கொள்ளை நோய்கள் தாக்கின. குறிப்பாக பிறக்கும் பச்சிளங் குழந்தைகளை பலி வாங்கியது. எனவே சித்திரையில் குழந்தை பிறப்பை தடுக்க ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைத்தனர்.

ஆனால் இன்றைய நவீன மருத்துவத்தில் கொள்ளை நோய்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டன. எனவே நியூ மாப்பிள்ளைகளே , 4 , 5 வருஷம் ஆனாலும் விடாம ஆடி அழைப்புக்கு போகும் மாப்பிள்ளைகளே... போனாமா .. 2 நாள் தங்கி விழாவை சிறப்பிச்சுட்டு மனைவியை கையோட கூட்டிட்டு வந்துருங்க..!

"ஆடி மாசம் காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே ...."


ஹேப்பி தலையாடி ...!

குரு பக்தியும் நட்பின் உச்சமும்



கோவை ஜூபிடர் ஸ்டுடியோவில் SM சுப்பையா நாயுடு அவர்கள் இசை அமைப்பாளராக இருந்த பொது அவரிடம் உதவியாளராக சேர்ந்தார் MSV அவர்கள். அப்போது MSV போட்ட சில ட்யூன்களை கேட்டு அசந்து போனார் . அவற்றை தன படங்களில் பயன்படுத்திக் கொண்டார். சில ஆண்டுகளில் ஜூபிடர் ஸ்டூடீயோ சென்னைக்கு மாற்றப்பட்ட போது ,அதன் உரிமையாளரிடம் சுப்பையா நாயுடு அவர்கள் " இந்த பையனையும் ( MSV ) உங்களுடன் கூட்டிசெல்லுங்கள் . இவன் பொக்கிஷம் . நான் கடைசியாக இசை அமைத்த பாடல்கள் எல்லாம் இவன் தான் இசை அமைத்தான் " என்றார். அன்று முதல் MSV வாழ்வில் திருப்பு முனை . 



தன்னை ஏற்றிவிட்ட குருவை MSV என்றும் மறந்ததில்லை . SM சுப்பையா நாயுடுவின் இறுதி காலத்தில் தன் பராமரிப்பிலேயே வைத்துக் கொண்டார். அவர் மறைந்த போது மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதி சடங்குகளை செய்தார்.

அதே போல் நகைச்சுவை மன்னன் சந்திர பாபு , MSV யின் நட்பும் . நகைச்சுவை நடிகராக , பாடகராக , நடன கலைஞராக தமிழ் திரையில் தனி முத்திரை பதித்த சந்திர பாபு , திரை உலகில் உயிர் நண்பராக நினைத்தது MSV ஐ மட்டுமே. இறுதி காலத்தில் அவர் பல்வேறு சிரமங்களில் இருந்த போது ஆறுதலாக இருந்தார் MSV . ''நான் இறந்தால் நீதாண்டா எனக்கு கொள்ளி வைக்கணும் '' என MSV இடம் சொல்லிக்கொண்டே இருப்பார் சந்திர பாபு . அதே போலவே சந்திர பாபு இறந்தவுடன் அவர் உடல் MSV வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது . MSV தன் நண்பனுக்கு இறுதி சடங்குகள் செய்து கொள்ளி வைத்தார் .

தன் ரத்த உறவு இல்லாத குருவுக்கும் , நண்பனுக்கும் MSV செய்த இறுதி மரியாதை போல வேறு உதாரணமே கிடையாது. இசையை தாண்டி மனிதம் என்றால் என்ன என்பதற்கு உதாரண புருஷர் . !

திங்கள், 13 ஜூலை, 2015

MS.விஸ்வநாதன்

MS.விஸ்வநாதன்‬

 


தமிழிசையின் அடையாளமாய்
ராமமூர்த்தியின் நண்பனாய்
கண்ணதாசன் வாலிக்கு முகவரியாய் 


சவுந்தரராஜன் சுசீலாவுக்கு குரலாய்
எம்ஜியார் சிவாஜிக்கு உயிராய்
ராஜா ரஹ்மானுக்கு ஆசானாய் 


ரசிக பெருமக்களுக்கு
இன்பத்தின் ஊற்றாக
துன்பத்தின் வடிகாலாக 


காதலின் தீபமாக
அன்பாக அறிவுரையாக
தாயாக தத்துவமாக 


உயிராக
உணர்வாக
தமிழாக - வாழும்
உன் இசைக்கு
என்றும் மரணமில்லை ...


போய் வா தமிழிசையே.....


J .மோகன்

வியாழன், 9 ஜூலை, 2015

மதுபானக்‬ கடை

மதுபானக்‬ கடை

சாராய வருமானத்தை நம்பியே அரசு நடப்பதால் மதுவை ஒழிக்க வழியில்லை . ஆனால் முறைபடுத்த முடியும் .

1.வியாபார நேரம் மதியம் 2 முதல் இரவு 10 மணி வரை மட்டும் இருக்கவேண்டும். காலை கட்டட வேலை , கூலி வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் காலை வேலைக்கு போகும் போதே குடித்துவிட்டு செல்கிறார்கள்.

2. சாதாரணமாக எந்த மதுவை தயாரித்தாலும் இயற்கையாக புளிக்கவைத்து ஆல்கஹால் உருவாக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு மிகக் குறைந்த விலை தருவதால் , தமிழகத்திற்கு தரும் மதுவிற்கு மட்டும் செயற்கை ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. பிற மாநில மதுவகைகளை விட தமிழக மது மிக அதிக உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் . எனவே இதை அரசு தவிர்க்க வேண்டும்.

3.அரசு பார்களை மூட வேண்டும். அதே நேரத்தில் கடைக்கு வெளியே குடிக்க அனுமதிக்க கூடாது.

4. கேரளாவில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பதில்லை. சிறிய சந்தேகம் இருந்தாலும் அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்த பின்பே தருகிறார்கள். நம் ஊரில் சின்ன குழந்தை கேட்டால் கூட தருகிறார்கள். நம் ஊரிலும் இதை கட்டாயமாக்க வேண்டும்.

4. டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 35000 கோடி வியாபாரம் நடக்கிறது. 20000 கோடி லாபம் . உலகிலேயே இவ்வளவு பெரிய வியாபாரத்திற்கு துண்டு சீட்டு கூட தராமல் , பில் போடாமல் விற்பது தமிழகத்தில் மட்டும் தான். கட்டாயம் பில தரவேண்டும்.

5. ஆன்லைன் பில்லிங் முறை கொண்டுவரவேண்டும். அவ்வாறு செய்தால் போலி மது அறவே ஒழிக்கப்படும் . வருமானம் முறையாக அரசுக்கு போய் சேரும்.

6. ஒவ்வொரு கடையிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.

7.காலுக்கு போடும் செருப்பை விற்கும் கடைகள் ஏசி வசதியுடன் சுத்தமாக இருக்கிறது. ஆனால் டாஸ்மாக் கடைகள் மிகக் கேவலமாக உள்ளது .
நகர்பகுதிகளில் அருகருகே உள்ள இரண்டு கடைகளை ஒன்றாக மாற்றி நல்ல கட்டிடங்களுக்கு மாற்றலாம் .குறைந்தது 20 சதவீத கடைகளை குறைக்கலாம்.

8. அதிக ஆல்கஹால் உள்ள மது பானங்களை தடை செய்ய வேண்டும்.

9. குடி போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. கள்ளுக் கடைகளை அனுமதிக்கலாம். விஸ்கி , பிராந்திகளை விட கள்ளு மிகக் குறைந்த தீங்கு தான் .செய்யும் .

11. கூடுதல் விலைக்கு விற்பதன் மூலம் ஊழியர்களும் , மட்ட சரக்கை அனுமதிப்பதன் மூலம் அதிகாரிகளும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆன்லைன் பில்லிங் மூலம் கட்டாயமாக பில் போட்டு விற்கும் போதுதான் இவை தடுக்கப்படும்.

12. கிரானைட் வழக்க்குகள் முடிந்த பின் திரு சகாயம் அவர்களை தமிழக டாஸ்மாக் தலைவராக நியமிக்க வேண்டும்.

13.மேற்கூறிய நேரம் குறைப்பு , கடைகள் குறைப்பு , அரசு பார் மூடல் , பில்லிங் , கேமரா , போலி மது ஒழிப்பு , கள்ளு , மற்றும் சகாயம் சார் ... இவைகளால் சுமார் 50 சதவீத வியாபாரம் குறையலாம் . ஆனால் முறைப் படுத்தப்பட்ட வியாபாரத்தால் 20 சதவீத கூடுதல் வருமானம் கிடைக்கும் .

14.மதுவை முற்றிலும் தடை செய்ய தேவையில்லை .கிட்டத்தட்ட உலகமெங்கும் மது உள்ளது. இந்தியாவில் குஜராத் தவிர எல்லா மாநிலத்திலும் மது உள்ளது. ஆனால் குடியினால் அதிக உயிரிழப்பு , உடல் நல பாதிப்பு , குடும்ப சீர்கேடுகள் தமிழகத்தில் மட்டும் தான் மிக அதிகம் . அதனால் தான் இந்த பதிவு .

15 .அம்மா செய்வீர்களா...!