இந்து மதம் எங்கே போகிறது
மத்திய ஆசியாவிலிருந்து சுமார் 2500-3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள் ( பின்னாளில் அந்தணர்கள் என அழைக்கப்பட்டனர்) , இந்தியாவில் பசுவதையை அறிமுகப்படுத்தினர்.
மேலும் அஸ்வமேக யாகம் என்ற பெயரில் ஏராளமான குதிரைகளையும் பலி கொடுத்தனர்.
எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் உயிர்பலி கட்டாயம் கொடுக்கவேண்டும் என மன்னர்களையும்,மக்களையும் நம்ப வைத்தனர்.
பின்னாளில் இந்த உயிர்பலியை பெருமளவிற்கு தடுத்து நிறுத்தியவர் புத்தர். தனது சீடர்களுடன் ஊர் ஊராக சென்று மக்களிடம் பேசி இந்த மூடநம்பிக்கையை கைவிட வைத்தார்.
உயிர்பலிக்கு பதிலாக எலுமிச்சை,பூசணி ஆகியவற்றை (குங்குமம் வைத்து) பலியிடும் முறையை கொண்டுவந்ததும் புத்தர் பெருமானே... -''அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்'' எழுதிய
''இந்து மதம் எங்கே போகிறது'' - என்ற நூலிலிருந்து.
-நக்கீரன் பதிப்பகம் வெளியீடு.
