புதன், 2 செப்டம்பர், 2015

துணி துவைக்க எவ்வளவு நேரம் ஊறவைக்கிறீர்கள்...

துணி துவைக்க எவ்வளவு நேரம் ஊறவைக்கிறீர்கள்...

 

என் மனைவி காலையில் எழுந்தவுடன் துணியெல்லாம் எடுத்து சோப்புத்தூள் போட்டு ஊறவைத்து விடுவார். பிறகு நேரம் கிடைக்கும் போது மாலையோ அல்லது அடுத்த நாளோ எடுத்து வாஷிங் மெஷினில் போடுவார். " இவ்வளவு நேரம் எதற்கு ஊறவைக்கிறாய் . துணி வீணாக போய்விடாதா " என நான் கேட்பேன். "உங்களுக்கு என்ன தெரியும் , பேசாம போங்க" என்பார்.

இது குறித்து P&G நிறுவன சோப் பிரிவு (ARIEL) அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். " இப்போது தயாரிக்கப்படும் சலவை சோப் , சோப்பு தூள் எல்லாமே தற்போதைய அவசர உலகிற்கு தக்கவாறு தயாரிக்கப் படுகின்றன. எனவே 30 நிமிடங்கள் ஊறவைத்தால் போதுமானது. அதிகபட்சம் 2 மணி நேரம் இருக்கலாம். அதற்கு மேல் ஊறவைத்தால் துணிகள் வீணாகும் . அதுவும் காட்டன் சர்ட் , பேன்ட்கள் FADE ஆகும் வாய்ப்பு உண்டு " என்றார்.
அவர் சொன்னது எனக்குப் புரிந்தது . இதோ இதை படிக்கும் உங்களுக்கும் புரியக்கூடும். ஆனால் மனைவியிடம் இதைப் பற்றி சொன்னால் .. மீண்டும் அதே டயலாக் தான்..

"உங்களுக்கு என்ன தெரியும் , பேசாம போங்க" !

‪#‎பொண்டாட்டி‬ சொன்னா கேட்டுக்கணும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக