திங்கள், 12 அக்டோபர், 2015

சயாம் மரண ரயில்

சயாம் மரண ரயில் 


1942 . இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த சமயம். இந்தோனேசியா , மலேசியா , சிங்கப்பூர் , தாய்லாந்து போன்ற நாடுகளை புயல் வேகத்தில் கைப்பற்றியது ஜப்பான். அடுத்து பர்மா வழியாக பிரிட்டிஷ் இந்தியாவை கைப்பற்ற திட்டமிட்டது. ஆனால் ஆறுகளும் , அடர்ந்த காடுகளும் உள்ள பர்மா வழியே ஆயுதங்களும் யுத்த தளவாடங்களும் கொண்டுசெல்ல முடியவில்லை . எனவே தாய்லாந்தின் காஞ்சனாபுரியில் இருந்து பர்மாவின் தான்பியூசாயாட் என்ற இடம் வரை 415 கிமி தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க திட்டமிட்டனர். அதுவும் ஒரே ஆண்டில் முடிக்கவேண்டும்.

இதற்காக மலேசியா , சிங்கப்பூரில் இருந்த தோட்டத் தொழிலாளர்கள் ( தமிழர்கள் ) , பர்மியர்கள், சயாமியர்கள் ,ஆங்கிலேய யுத்த கைதிகள் வலுக்கட்டாயமாக பணி அமர்த்தப் பட்டனர் . சுமார் 1.2 லட்சம் தமிழர்கள் , 30000 ஆங்கிலேயர்கள் உட்பட 3 லட்சம் பேர் . 1942 ஜூன் முதல் 1943 அக்டோபர் வரை நடந்த இந்த பணியில் ஜப்பானியர்களின் கொடூர தண்டனை , கடுமையான வேலை , தோற்று நோய்கள் போன்றவற்றால் சுமார் 2 லட்சம் பேர் மரணம் அடைந்தனர். 1.2 லட்சம் தமிழர்களில் 1 லட்சம் பேர் இறந்தனர். 

இதைவிட மிகவும் குறைவான இழப்புகளை சந்தித்த இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , அமெரிக்கா போன்றவை யுத்ததிற்கு பிறகு ஜப்பான் மீது உரிய நடவடிக்கை எடுத்தது. 1957 இல் 'Bridge on the River Kwai' என்ற பெயரில் படமாகவும் வந்து. இன்றளவும் அங்குள்ள கல்லறைகளை பராமரிக்கிறார்கள்.

ஆனால் தமிழர்கள்... இந்திய அரசிடம் இன்றும் முறையான ஆவணம் இல்லை. மலேசிய அரசும் இறந்தவர்கள் தோட்டத் தொழிலார்கள் என்பதால் அதிகம் கண்டுகொள்ளவில்லை. ஒரே ஆண்டில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப் பட்டது குறித்து எந்த அரசியல்வாதியும் பேசியது இல்லை. மனித வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தேவையில்லாத கொடூர திட்டமாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



இந்த ரத்தமும் மரணமும் நிறைந்த வரலாற்றை அழுத்தமான ஒரு காதலுடன் அட்டகாசமான நாவலாக எழுதி உள்ளார் சண்முகம் . இதை படிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை ...

சயாம் மரண ரயில்
ஆசிரியர் : சண்முகம்
தமிழோசை பதிப்பகம்,
கோயமுத்தூர்-641 012.
தொலை பேசி - 9486586388

ஆன்லைனில் வாங்க....

 http://discoverybookpalace.com/products.php?product=சயாம்-மரண-ரயில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக