வியாழன், 2 மார்ச், 2017

இந்தியர்களின் பன்னாட்டு பிராண்டுகள்

உள்ளூர் பொருட்கள் ஆதரிப்போம் - 11


இந்தியர்களின் பன்னாட்டு பிராண்டுகள்


கோக் , பெப்சி இங்கே வைத்து இந்திய நிறுவனங்களை விலைக்கு வாங்கியதைப் போல பன்னாட்டு நிறுவனங்களை இந்திய கம்பெனிகள் வாங்க தொடங்கி உள்ளன . ஜாகுவார் , லேண்ட் ரோவர் கார் நிறுவனங்களை டாடா கையகப் படுத்தியது போல ...

1. யார்ட்லி 


1770 ஆம் ஆண்டு பிரிட்டனில் தொடங்கப்பட்ட யார்ட்லி நிறுவனம் , உலகின் பழமையான நிறுவனங்களில் ஒன்று . யார்ட்லியின் சோப் , பவுடர் , பாடி ஸ்ப்ரே உபயோகிப்பது சமூகத்தில் அந்தஸ்தான ஒன்றாக கருதப்பட்டது . இந்தியாவின் விப்ரோ நிறுவனம் 2009 ஆம் ஆண்டு யார்ட்லியின் ஆசியா , மத்திய கிழக்கு நாடுகள் ,ஆப்ரிக்க , ஆஸ்திரேலிய பிரிவுகளையும் , 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பிரிவுகளையும் வாங்கியது . இப்போது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா பிரிவு தவிர உலகம் முழுதும் உள்ள தொழிற்சாலைகள் விப்ரோ வசம்.

2. ஹெங்கெல் இந்தியா 


ஜெர்மனியை சேர்ந்த ஹெங்கெல் நிறுவனம் உலகில் பெரிய டிடெர்ஜென்ட் நிறுவனம் ஆகும் . உலகமெங்கும் வணிகம் செய்யும் ஹெங்கெலின் இந்திய பிரிவை மும்பையை சேர்ந்த ஜோதி லெபாரட்டரீஸ் ( உஜாலா சொட்டுநீல கம்பெனி ) வாங்கி உள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக