சனி, 18 ஆகஸ்ட், 2012

ரா.கி.ரங்கராஜன் மறைவு

ரா.கி.ரங்கராஜன் மறைவு

பிரபல எழுத்தாளரும், குமுதம் இதழின் ஆரம்ப கால தூண்களில் ஒருவருமான ரா.கி.ரங்கராஜன் சென்னையில் நேற்று [18.8.2012] காலமானார். தமிழ் எழுத்து உலகிற்கும், என்னை போன்ற வாசகர்களுக்கும் பேரிழப்பாகும்.


என் புத்தக ஆர்வத்தை துவக்கி வைத்தவர் ..

என்னுடைய புத்தக ஆர்வத்திற்கும், இன்று  வீட்டில்  சுமார் 500 நூல்களுடன் ஒரு மினி நூலகம் அளவிற்கு நூல்கள் வைத்திருப்பதற்கும் ரா.கி.ரங்கராஜன் ஐயா ஒரு முக்கிய காரணம் . 15 ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா சேலம் கன்னங்குறிச்சி அரசு பள்ளியில் பணிபுரிந்த போது , நூலகத்தில் இருந்து ஒரு புத்தகம் கொண்டுவந்தார். அதன் பெயர் பட்டாம்பூச்சி.


 ஹென்றி ஷாரியர் என்பவர் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்திருந்தார் ரா.கி.ர .
எதேச்சையாக அதை படிக்க துவங்கிய என்னால் ,முழுமையாக படிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. படிக்கும் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கும் அந்த நூல் பல நாட்கள் மனதை ஆக்கிரமித்திருந்தது. அதன் பாதிப்பிலேயே புத்தகங்களை தேடி தேடி வாங்க ஆரம்பித்தேன் .


பொன்னியின் செல்வன் போல தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த நூல்களில் ஒன்று பட்டாம்பூச்சி. படிக்கவும்,பாதுகாக்கவும்,பரிசளிக்கவும் ஒரு பட்டாம்பூச்சியை இன்றே வாங்குங்கள். அதுதான் அந்த மனிதருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.

பட்டாம்பூச்சி
மயிர் கூச்செறிய வைக்கும் மானிட சாசனம் -ஹென்றி ஷாரியர்

தமிழில் ரா.கி.ரங்கராஜன்
விலை . 250.00

நர்மதா பதிப்பகம்
No 10 1st Floor, Pondy Bazaar Adjacent To T Nagar Head Post Office, Nana Street, T Nagar, Chennai - 600017

ஆன்லைனில் வாங்க ...
http://discoverybookpalace.com/products.php?product=PattamPoochi%252dRa.Ki.Rangarajan%252dbuy-tamil-books

எண்ணமும் எழுத்தும்

மோகன்

1 கருத்து:

  1. நல்ல அஞ்சலி.
    அவருடைய இரு கட்டுரைகள் இங்கே:

    http://s-pasupathy.blogspot.ca/2012/08/1_19.html

    http://s-pasupathy.blogspot.ca/2012/08/2_3701.html

    பதிலளிநீக்கு