செவ்வாய், 12 ஜூலை, 2016

சின்ன வெங்காய சருகு

30 நாள் 30 மருத்துவம் - நாள் 2


சின்ன வெங்காய சருகு


மூலம் , ஆசனவாய் வெடிப்பு போன்றவற்றிற்கு அருமருந்தாக செயல் படுகிறது சின்ன வெங்காயத்தின் சருகு( மேல் தோல் ) . மேலும் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் வரும் முன் காக்கும் மருந்தாக செயல்படுகிறது. சின்ன வெங்காய சருகைக் கொண்டு தலையணை செய்து அதில் அமர்ந்து வந்தால் , மூலம் , ஆசனவாய் வெடிப்பு மூலம் ஏற்படும் வலி குறையும் . தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஆரம்பநிலை குறைபாடுகள் நீங்கும்.

வெங்காயம் விற்பவர்கள் சின்னவெங்காயத்தை புடைத்து சுத்தம் செய்துவிட்டு சருகை குப்பையில் போடுவார்கள் . அந்த சருகை வாங்கிவந்து , அதிலுள்ள வேர் ,நார் , குப்பைகள், நீக்கிவிட்டு சுத்தமான சருகை மட்டும் எடுத்துக்கொள்ளவும். காடா துணி அல்லது காட்டன் துணி கொண்டு உங்கள் இருக்கையில் வைக்கும் அளவுக்கு சருகை வைத்துத் தைத்து தலையணை செய்து கொள்ளவும்.


பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல , நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களும் இதை பயன் படுத்தினால் மூலம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். முடிந்தவரை குஷன் இருக்கை இல்லாமல் ஒயரில் நெட் போட்ட இருக்கைமீது இதை வைத்து அமர்வது சிறந்தது.

குறிப்பு 1 - குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சருகை மாற்றவும்.

குறிப்பு 2 - நாட்டு வெங்காய சருகாக இருந்தால் சிறப்பு.


குறிப்பு 3 - இந்த தகவலை என்னிடம் சொன்னது , MBBS , MD படித்த ஆங்கில மருத்துவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக