ரோசாப்பூ ரவிக்கைக்காரி
தேவராஜ் மோகன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த படம். முழு படமும் ஏற்காடு அருகே உள்ள வாழவந்தி போன்ற மலை கிராமங்களில் எடுக்கப்பட்டது.
"வெத்தல வெத்தல வெத்தலையோ..."
"உச்சி வகுந்தெடுத்து ..."
"என்னுள்ளில் எங்கோ கேட்கும் கீதம் ...."
இளையராஜாவின் இந்த பாடல்களுக்காக மட்டுமே இந்த படம் இன்னும் நினைவில் நிற்கிறது.
கதை ,திரைக்கதை தேவராஜ் மோகன் . ஆனால் இந்த படம் அதே ஆண்டு வெளியான God must be crazy என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது . அந்த படத்தில் எளிமையாக , ஒற்றுமையாக வாழும் ஒரு பழங்குடி மக்களிடையே ஒரு கோக் பாட்டில் கிடைக்க , அதன் மூலம் அவர்களின் வாழ்வில் நடக்கும் பிரச்சனைகளை சொல்லி இருப்பார்கள்.
அதே கதைதான். ஒற்றுமையாக , எளிமையாக வாழும் மலைவாழ் மக்கள் குடும்பத்தில் வாக்கப்பட்டு செல்கிறாள் நாகரிக பெண் ஒருத்தி. ரவிக்கை அணியாத மக்களிடையே நாகரிக மோகத்தை புகுத்துகிறாள் . ஆனால் ரவிக்கை அணியாத காலத்தில் விகல்பம் இல்லாமல் கண்ணியமாக வாழ்ந்த மக்கள் , நாகரீகம் வந்த பிறகு கெட தொடங்குகிறார்கள். செயற்கையான நாகரிகமே வாழ்வை அழித்துவிடும் என்ற கருத்தோடு முடிகிறது படம். சிவகுமாரும் தீபாவும் வாழ்த்து காட்டி இருக்கிறார்கள்.
God must be crazy போல இந்த படமும் மிகவும் மெதுவாக தான் நகர்கிறது . நிறைய பேருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் எளிமையை , ஒற்றுமையை , கூட்டு குடும்ப வாழ்க்கையை , இயற்கையை , கலாச்சாரத்தை அருமையாக உணர்த்தும் படம் . நான் இப்போது தான் பார்த்தேன்.நீங்களும் முடிந்தால் பாருங்கள் .
Mohan ,Salem.
burnt titanium - Vitanium-arts
பதிலளிநீக்குThese are ceramic ceramic surfaces used for metal There are different titanium hammer pieces of titanium tube glass titanium pipe and stilletto titanium hammer aluminum. One of them is an titanium screws iron. The other is a