ஞாயிறு, 29 ஜனவரி, 2017

பிஸ்லரி

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 5


பிஸ்லரி

 
1965 ஆம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த சிக்னர் பெலிஸ் பிஸ்லரி என்பவரால் மும்பையில் துவங்கப்பட்ட பிஸ்லரி வாட்டர் நிறுவனத்தை , 1969 இல் பார்லே நிறுவனர் ஜெயந்திலால் சவுகான் கையகப்படுத்தினார் . அன்று முதல் இந்தியாவில் அசைக்க முடியாத குடிநீர் நிறுவனமாக பிஸ்லரி விளங்குகிறது .
1993 இல் கோக் இந்திய சந்தையில் நுழைந்த பிறகு , நாடு முழுவதும் பிஸ்லரியை அறிமுகப்படுத்தினார் ஜெயந்திலாலின் மகன் ரமேஷ் சவுகான் . இன்றுவரை பார்லே இந்தியாவின் துணை நிறுவனமாக ,இந்திய பாட்டில் குடிநீரில் 50 சதவீதத்திற்கு மேல் விற்பனையை கொண்டுள்ளது பிஸ்லரி .
தற்போது இந்தியா முழுவதும் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் பிளான்டுகளை கொண்டுள்ள பிஸ்லரியின் விற்பனையை கோக் , பெப்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை .

அக்குவாஃபீனா , கின்லி குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருப்பதாக புகார் வந்த நேரத்திலும் பிஸ்லரி மீது புகார் இல்லை. குடிநீர் தரத்தை போலவே பாட்டிலின் தரத்தையும் உயர்த்தியது . கிரேட் 1 பாட்டில்களை உபயோகப்படுத்தும் பிஸ்லரி , அந்த பாட்டில்கள் 100 சதவீதம் மறுசுழற்சிக்கு உகந்தவை என அறிவித்துள்ளது .

பிஸ்லரியும் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது தான் . ஆனால் கோக் , பெப்சி மீது வந்தது போல புகார் வரவில்லை . எதிர்காலத்தில் கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலையை பிஸ்லரி அமைத்தால் , 100 சதவீத ஆதரவு உண்டு .

PRODUCTS : DRINKING WATER , SODA , URZZA , BISLERI POP ( cool drinks ) ....

Head office : Bisleri International Pvt. Ltd. Western Express Highway, Andheri (East), Mumbai - 400 099
Phone : +91 7045050505

web : http://www.bisleri.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக