சனி, 25 டிசம்பர், 2010

ராசா1.75 லட்சம் கோடி திருடவில்லை..


ராசா1.75 லட்சம் கோடி திருடவில்லை..
ஊடகங்கள் கூறுவதை வைத்து ராசா 1.75 லட்சம் கோடி திருடிவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை.
செல்போன்கள் செயற்கைக்கோள் அலைவரிசை மூலமாக இயங்குகின்றன. ஸ்பெக்ட்ரம் பிரச்சனை என்பது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அந்த அலைவரிசைகளைப் பயன்படுத்திக் கொள்ள ,அரசுக்கு செல்போன் நிறுவனங்கள் ஏலத்தில் செலுத்திய பணம் பற்றியது.
1.75 லட்சம் கோடி என்பது இந்த அலைவரிசை மூலம் செல்போன் நிறுவனங்கள் சம்பாதிக்கும் வருமானத்தை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் ராசா என்ன செய்தார் என்றால் ,1.75 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளை ஏழாயிரம் கோடிக்கு (சுமார்25 மடங்கு குறைவாக) விற்றுவிட்டார் .
அதற்கு பிரதி பலனாக ரூ. ஐம்பதாயிரம் கோடி மட்டும் லஞ்சமாக வாங்கிக்கொண்டார் . சுப்ரமணிய சாமி சொல்லியவாறு ,சோனியா ,கலைஞர் ,கனிமொழி ஆகியோருக்கு கொடுத்தது போக ,ராசாவுக்குக் கிடைத்தது வெறும் பத்தாயிரம் கோடி மட்டுமே.!

அடுத்தது, இந்த1.75 லட்சம் கோடி பணம் எப்படி வரும் ?
மேற்படி வியாபாரத்தில் அரசுக்கு கட்டியது ரூ. ஏழாயிரம் கோடி மட்டுமே . ஆனால் செல் நிறுவனங்கள் நம்மிடம் வாங்குவது1.75 லட்சம் கோடி.

உலகின் பெரும்பாலான நாடுகளில், உள்நாட்டுக்குள் பேச கட்டணம் கிடையாது. ஆண்டுக்கு ஒரு முறை வாடகையாக ஒரு சிறு தொகை மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

ஆனால் நாம் இந்தியாவில் சுமார்25 மடங்கு அதிகமாக பில் கட்டுகிறோம். உதாரணமாக , ஆயிரம் ரூபாய் பில் கட்டும் ஒருவர் ,நியாயமாக40 ரூபாய் மட்டுமே கட்ட வேண்டும் .

சமீபத்திய கணக்கின் படி இந்தியாவில் சுமார்65 கோடி செல் இணைப்புகள் உள்ளன. பிச்சைக்காரர்களையும் சேர்த்து.
அதாவது பிச்சைக்காரர்களிடமே பிடுங்கி திங்கும் அளவுக்கு நம் அரசியல்வாதிகள் இறங்கிவிட்டதை நினைக்கும் போது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக