மெகா சீரியல்கள் - ஒரே கதை
விஜய் டிவியின் சில மெகா சீரியல்களை பார்க்க நேர்ந்தது. அதன் கதை இதோ...
1.சரவணன் மீனாட்சி
மீனாட்சி சரவணனை திருமணம் செய்யாமல் வேறு ஒருவனை திருமணம் செய்து
கொள்கிறாள். அவனுடனே வாழ்வாளா அல்லது மீண்டும் சரவணனை அடைவாளா என்பதே மீதி
கதை
2.ஆபீஸ்
நாயகன் கார்த்தி
க்கும் நாயகி ராஜிக்கும் விவாகரத்து ஆகிவிட , ராசிக்கு வேறு ஒருவனுடன்
திருமண ஏற்பாடு நடக்கிறது. ராஜி அவனை திருமணம் செய்வாளா அல்லது மீண்டும்
கார்த்தியுடன் இணைவாளா என்பது மீதி கதை.
3.கல்யாணம் முதல் காதல் வரை
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் விவாகரத்து. ஹீரோயின் வேறு ஒருவனுடன்
வாழ்கிறாள். ஹீரோ 2வது திருமணம் செய்கிறார். அது ஹீரோயினுக்கு
பிடிக்கவில்லை. ஹீரோ 2வது மனைவியுடன் வாழ்வாரா பிரிவாரா என்பது மீதி கதை.
4 .சன் டிவி
இங்கும் இதே செட் அப் தான். சன் டிவியை பொறுத்தவரை எல்லா நாடகத்திலும்
நாயகனோ நாயகியோ குறைந்தது 2 திருமணங்கள் செய்கிறார்கள். கலைஞர் டிவியிலும்
இதே கதைதான். முறையற்ற உறவுகளை அழுது , ஒப்பாரி வைத்து பார்ப்பவர்களை நம்ப
வைக்கிறார்கள் . டிவி பார்க்கும் நம்ம தாய்குலங்களும் “பாவம் அவ ..எவ்வளவு
கஷ்டத்தை தான் தாங்குவா ..” என புலம்புகிறார்கள். கடைசியில் இது மன
அழுத்தத்தை ஏற்படுத்தி நிஜ வாழ்க்கை உறவுகளை பிரிக்கிறது.
10 டிவிக்கள்
100 சீரியல்கள்
1000 எபிசோட்கள்
[ மெகா சீரியல் பார்ப்பது வீட்டிற்கும் நாட்டிற்கும் மின்சாரத்திற்கும் கேடு.! ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக