ஆடி பிறப்பு
"ஆடியிலே கட்டிக்கிட்டா
சித்திரைக்கு புள்ள வரும்
ஆகாது ஆகாது மச்சானே ....
இது தோதான தை மாசம் வச்சானே "
அதாகப்பட்டது புது மாப்பிள்ளை , புது பொண்ணுங்களே... சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்ம ஊரில் கோடை காலங்களில் குறிப்பாக சித்திரை மாதத்தில் காலரா போன்ற கொள்ளை நோய்கள் தாக்கின. குறிப்பாக பிறக்கும் பச்சிளங் குழந்தைகளை பலி வாங்கியது. எனவே சித்திரையில் குழந்தை பிறப்பை தடுக்க ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைத்தனர்.
ஆனால் இன்றைய நவீன மருத்துவத்தில் கொள்ளை நோய்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டன. எனவே நியூ மாப்பிள்ளைகளே , 4 , 5 வருஷம் ஆனாலும் விடாம ஆடி அழைப்புக்கு போகும் மாப்பிள்ளைகளே... போனாமா .. 2 நாள் தங்கி விழாவை சிறப்பிச்சுட்டு மனைவியை கையோட கூட்டிட்டு வந்துருங்க..!
"ஆடி மாசம் காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே ...."
ஹேப்பி தலையாடி ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக