வியாழன், 9 ஜூலை, 2015

மதுபானக்‬ கடை

மதுபானக்‬ கடை

சாராய வருமானத்தை நம்பியே அரசு நடப்பதால் மதுவை ஒழிக்க வழியில்லை . ஆனால் முறைபடுத்த முடியும் .

1.வியாபார நேரம் மதியம் 2 முதல் இரவு 10 மணி வரை மட்டும் இருக்கவேண்டும். காலை கட்டட வேலை , கூலி வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் காலை வேலைக்கு போகும் போதே குடித்துவிட்டு செல்கிறார்கள்.

2. சாதாரணமாக எந்த மதுவை தயாரித்தாலும் இயற்கையாக புளிக்கவைத்து ஆல்கஹால் உருவாக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு மிகக் குறைந்த விலை தருவதால் , தமிழகத்திற்கு தரும் மதுவிற்கு மட்டும் செயற்கை ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. பிற மாநில மதுவகைகளை விட தமிழக மது மிக அதிக உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் . எனவே இதை அரசு தவிர்க்க வேண்டும்.

3.அரசு பார்களை மூட வேண்டும். அதே நேரத்தில் கடைக்கு வெளியே குடிக்க அனுமதிக்க கூடாது.

4. கேரளாவில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பதில்லை. சிறிய சந்தேகம் இருந்தாலும் அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்த பின்பே தருகிறார்கள். நம் ஊரில் சின்ன குழந்தை கேட்டால் கூட தருகிறார்கள். நம் ஊரிலும் இதை கட்டாயமாக்க வேண்டும்.

4. டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 35000 கோடி வியாபாரம் நடக்கிறது. 20000 கோடி லாபம் . உலகிலேயே இவ்வளவு பெரிய வியாபாரத்திற்கு துண்டு சீட்டு கூட தராமல் , பில் போடாமல் விற்பது தமிழகத்தில் மட்டும் தான். கட்டாயம் பில தரவேண்டும்.

5. ஆன்லைன் பில்லிங் முறை கொண்டுவரவேண்டும். அவ்வாறு செய்தால் போலி மது அறவே ஒழிக்கப்படும் . வருமானம் முறையாக அரசுக்கு போய் சேரும்.

6. ஒவ்வொரு கடையிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.

7.காலுக்கு போடும் செருப்பை விற்கும் கடைகள் ஏசி வசதியுடன் சுத்தமாக இருக்கிறது. ஆனால் டாஸ்மாக் கடைகள் மிகக் கேவலமாக உள்ளது .
நகர்பகுதிகளில் அருகருகே உள்ள இரண்டு கடைகளை ஒன்றாக மாற்றி நல்ல கட்டிடங்களுக்கு மாற்றலாம் .குறைந்தது 20 சதவீத கடைகளை குறைக்கலாம்.

8. அதிக ஆல்கஹால் உள்ள மது பானங்களை தடை செய்ய வேண்டும்.

9. குடி போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. கள்ளுக் கடைகளை அனுமதிக்கலாம். விஸ்கி , பிராந்திகளை விட கள்ளு மிகக் குறைந்த தீங்கு தான் .செய்யும் .

11. கூடுதல் விலைக்கு விற்பதன் மூலம் ஊழியர்களும் , மட்ட சரக்கை அனுமதிப்பதன் மூலம் அதிகாரிகளும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆன்லைன் பில்லிங் மூலம் கட்டாயமாக பில் போட்டு விற்கும் போதுதான் இவை தடுக்கப்படும்.

12. கிரானைட் வழக்க்குகள் முடிந்த பின் திரு சகாயம் அவர்களை தமிழக டாஸ்மாக் தலைவராக நியமிக்க வேண்டும்.

13.மேற்கூறிய நேரம் குறைப்பு , கடைகள் குறைப்பு , அரசு பார் மூடல் , பில்லிங் , கேமரா , போலி மது ஒழிப்பு , கள்ளு , மற்றும் சகாயம் சார் ... இவைகளால் சுமார் 50 சதவீத வியாபாரம் குறையலாம் . ஆனால் முறைப் படுத்தப்பட்ட வியாபாரத்தால் 20 சதவீத கூடுதல் வருமானம் கிடைக்கும் .

14.மதுவை முற்றிலும் தடை செய்ய தேவையில்லை .கிட்டத்தட்ட உலகமெங்கும் மது உள்ளது. இந்தியாவில் குஜராத் தவிர எல்லா மாநிலத்திலும் மது உள்ளது. ஆனால் குடியினால் அதிக உயிரிழப்பு , உடல் நல பாதிப்பு , குடும்ப சீர்கேடுகள் தமிழகத்தில் மட்டும் தான் மிக அதிகம் . அதனால் தான் இந்த பதிவு .

15 .அம்மா செய்வீர்களா...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக