செவ்வாய், 1 மார்ச், 2016

மிஷன் காம்பவுண்ட்



மிஷன் காம்பவுண்ட்




குலசாமிக்கு பலியிட ஆடு வளர்ப்பவன் அதன் மீது வைத்த பாசப் போராட்ட மன உளைச்சலில் தன்னையே பலிகொடுக்கும் இசக்கி (குலசாமியைக் கொன்றவன்);
இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டு அன்பும், தியாகமும் வெளிஉலகுக்கு புரியாவிட்டாலும் கடைசிவரை நேர்மையாய் வாழ்ந்து சாகும் சுசீலா (அப்பாவின் காதலிக்கு... )


நாகர்கோவில் மண் வாசனையுடன் காதல் வாழ்க்கையின் வலி , வலியால் சந்தேகம் , சந்தேகத்தின் பலி .. என உருக்கும் மனிதர்கள் ( மிஷன் காம்பவுண்ட் ) ;
யானையின் கனவு முதல் வானத்தின் கனவு வரை சிதைக்கும் மனிதம் ( யானையின் கனவில் .... )

ஜி.கே , உறை , வாக்குமூலம் , தனி .... எல்லாமே தனிமையில் உழலும் மனிதர்களின் கனவு ,வலி , வன்மம் , காமம் , ஏக்கம் , நட்பு , துரோகம் , தற்கொலை எண்ணங்கள்.. என ஆழ்மனத்தின் வலியையும் , வக்கிரங்களையும் வீரியமாக பதிவு செய்கிறார் ஒவ்வொரு கதையிலும் . கதையாக இவை எல்லாமே அருமையானவை. சொந்த பாதிப்பும் உள்ளது எனில் மீண்டு வா கணேசா...


மிஷன் காம்பவுண்ட்
தக்கை பதிப்பகம் , சேலம் .

புத்தகம் தேவைப்படுவோருக்கு...
டிஸ்கவரி புக் பேலஸ் , சென்னை Ph:044-65157525 ,9940446650

கணேசகுமாரன் , சென்னை
98409-24906

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக