ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

மோகன் தேர்தல் அறிக்கை 2016

மோகன் தேர்தல் அறிக்கை 2016


1. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி , குளங்களும் தூர்வாரப்படும் . ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஏரி , குளங்களுக்கு தனி அமைச்சர் நியமிக்கப்படுவார்.
2. குளிர்பான நிறுவனங்கள் , மினரல் வாட்டர் நிறுவனங்கள் , அதிக நீர் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் போன்றவை கடலோரத்திற்கு மாற்றப்படும். கடல்நீரை சுத்திகரித்துப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.
3.சிறு வணிக நிறுவனங்கள் ஒரே துறையின் கீழ் கொண்டுவரப்படும். தொழிலாளர் நலன் , எடை முத்திரை ஆய்வு , உணவு பாதுகாப்பு , உள்ளாட்சி வரிகள் , வணிக வரி ...எல்லாம் ஒரே அலுவலகத்தின் கீழ் கொண்டுவரப் படும்.
4. ஆன்லைன் வர்த்தகத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் ( 2 கோடி வணிகர்களின் வாழ்வாதாரம் வெறும் 20 நிறுவனங்களால் பாதிக்கப்படுகிறது )
5. டோல்கேட்கள் அரசுடமையாக்கப்படும்.
6. விளைநிலங்கள் பிளாட் போடுவது குற்றமாக அறிவிக்கப்படும். குறைந்தது 10 ஆண்டுகள் விவசாயம் செய்யாமல், அரசு மின்சாரம் , மானியம் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே பிளாட் போட அனுமதிக்கப்படும்.
7. அடுக்குமாடி குடியிருப்புகள் , வணிக வளாகங்கள் , ஹோட்டல்கள் போன்றவற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு , மழைநீர் சேகரிப்புக்கு மும்பையில் உள்ளது போல ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது கட்டாயம் ஆக்கப்படும்.
8. அனைத்து நகரங்களிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்படும் .
9. அனைத்து காய்கறிகளுக்கும் குறைந்த பட்ச விலை ரூ.10 ஆக நிர்ணயிக்கப்படும். அதற்கு கீழே விலை வரும் போதெல்லாம் அரசு மையங்களில் 10 ரூபாய் விலையில் கொடுத்துவிடாம்.
10. ஆற்று மணல் அள்ள தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக கிரஷர் மணல் பயன்படுத்தப்படும் .
11. ஒவ்வொரு துறைக்கும் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரி தலைவராக நியமிக்கப் படுவார். ஒரு நேர்மையான அதிகாரி இருந்தால் 1000 ஊழல்வாதிகளை கட்டுப்படுத்தமுடியும்.
12. அணு உலைகள் மூடப்படும் .
13. தமிழகத்தில் உள்ள குண்டு பல்ப் , சோடியம் மெர்குரி பல்ப்கள் , டியூப் லைட் போன்றவற்றிற்கு பதிலாக LED பல்புகள் மாற்றினால் 5000 மெகாவாட் மின்சாரம் மீதி ஆகும் . இது கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தைவிட 5 மடங்கு அதிகம். உடனடியாக நடைமுறைப் படுத்தப்படும் . குறைந்த மின்சாரத்தில் இயங்கும் LED விளக்குகளுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்.
14. +2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கும் 5 லட்ச ரூபாய் , அவன் ஆசிரியர்களுக்கு தலா 1 லட்சம் , அந்த பள்ளியை மேம்படுத்த 1 கோடி வழங்கப்படும்.
15. தன் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கவைக்கும் அரசு ஊழியர்களுக்கு மாதம் 5 ஆயிரம் சம்பளம் அதிகமாக தருவோம். ( ஆசையை தூண்டினால் தான் வேலை ஆகும் )
எதிர்காலத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் நிறைவேற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
-மோகன், சேலம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக