செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஔரங்கசீப்‬

.

வரலாறு‬ முக்கியம் அமைச்சரே – 3


ஔரங்கசீப்‬


சரியான உச்சரிப்பு ஔரங்கஜேப் .பாரசீக மொழியில் ஔரங்கஜேப் என்ற சொல்லுக்கு, அழகிய அரசு சிம்மாசனம் என்று பொருள். ஆலம்கீர் ஔரங்கஜேப் பாதுஷா என்ற பெயரில் ஆண்ட இந்த மன்னரை ஒரு கொடுங்கோலராக நமக்கு பள்ளியில் சொல்லி கொடுத்திருக்கிறார்கள் . இது எவ்வளவு உண்மை...?

தந்தையை சிறையில் அடைத்தவர். சகோதரனைக் கொன்று அரசரானவர். இந்துக்கள் மீது ஜெசியா வரியை விதித்தவர். சிவாஜியை கைது செய்தவர் என்பன .

ஆனால் வரலாற்றை பார்த்தால் எந்த மன்னனுமே பதவி ஏற்கும்போது , தனக்கு போட்டியாக வரும் என நினைப்பவர்களை கொன்று இருக்கிறார்கள். ஔரங்கஜேப்பின் தந்தை ஷாஜஹானும் அப்படிதான் மன்னரானார். அதே போல் ஷாஜஹான் மூத்த மகனுடன் சேர்ந்து சதி செய்து இருந்தாலும் , அவரை கொல்லாமல் வீட்டு சிறையில் வைத்தார்.

இந்துக்கள் மீது மட்டும் ஜெசியா வரி விதித்தார் என பள்ளியில் சொல்லி குடுத்தார்கள். ஆனால் அவர் முஸ்லீம்களுக்கும் வேறு பெயரில் வரி விதித்தார். அதே நேரத்தில் ஏழ்மையானவர்கள் , போரில் குடும்பத்தை இழந்தவர்களுக்கு வரி விலக்கும் அளித்தார். எல்லா மன்னர்களும் வரி வாங்கி தான் ஆட்சி நடத்தினார்கள்.

சிவாஜியை பொறுத்தவரை அவர் ஏதாவது ஒரு முகலாய பகுதியை பிடித்துக் கொள்வார். ஔரங்கஜேப் அதை மீட்பார் . சிவாஜி காலம் முடியும் வரை (25 ஆண்டுகள் )இது தொடர்ந்தது. ஆரம்ப காலத்தில் ஒருமுறை சிவாஜியை கைது செய்தார் . சிவாஜி தப்பிவிட்டார்.

சாதனைகள்
-------------------

1. அகண்ட பாரதத்தை ஆண்ட ஒரே மன்னர் இவர் மட்டுமே. இன்றைய ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , வங்கதேசம் முதல் மதுரை வரை அவர் சாம்ராஜ்யம் விரிந்து இருந்தது.

2. மதுவை தொடாதவர். அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பர செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை

3. 20 ஆண்டுகள் இளவரசராக பல போர்களை வழி நடத்தினார். 50 ஆண்டுகாலம் பேரரசராக ஆட்சி புரிந்தார். இந்த சாதனை இவரை தவிர யாரும் செய்ததில்லை.

4. ''தனது மரணத்திற்கு பின் தனது இறுதிச்சடங்கிற்கு தன் வாழ்நாளில் திருகுரான் எழுதியும், தொப்பி தைத்தும் விற்பனை செய்து சேர்த்து வைத்த சிறு தொகையை மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஆடம்பர கல்லறை கட்டக் கூடாது'' என உயில் எழுதி வைத்தார். [இதை எழுதிய போது பரத கண்டம் முழுதும் அவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.!]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக