செவ்வாய், 26 ஏப்ரல், 2016

கஜினி முகமது

வரலாறு முக்கியம் அமைச்சரே - 1

கஜினி முகமது


விடாமுயற்சிக்கு உதாரணமாக சொல்வது கஜினி முகமதுவை. அவன் 17 முறை தோற்றாலும் விடாமல் முயற்சி செய்து வெற்றி பெற்றான் என வரலாறு பாடத்தில் சொல்லி கொடுக்கப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல ...

இன்றைய ஆப்கானின் சாமர்கன்ட் பகுதியை சேர்ந்தவன் கஜினி முகமது . பாரசிக பேரரசுக்கு உட்பட்ட அரசில் அமீர் என்ற பொறுப்பில் இருந்த கஜினி , தனக்கென ஒரு படையை உருவாக்கி காந்தகார் உட்பட சில பகுதிகளை பிடித்து தன்னை மன்னனாக அறிவித்து கொண்டான் . பெஷாவர் அருகே நடைபெற்ற போரில் வட இந்திய மன்னன் ஜெயபாலனை வென்று அப்பகுதியை கைப்பற்றினான். இருந்தாலும் அவன் ஆசை எல்லாம் அன்று செல்வ செழிப்போடு இருந்த இந்தியா மீதே இருந்தது. காரணம் அன்று வடஇந்திய அரண்மனைகளிலும் கோவில்களிலும் தங்கம், வைரம் என கொட்டிக்கிடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஊரை குறிவைத்து தாக்கினான். அங்குள்ள அரண்மனை, கோவில்களை அழித்து , மக்களை கொன்று சொத்துக்களை கைப்பற்றி கொண்டு ஊர் திரும்புவான். குவாலியர்,உஜ்ஜயினி , மதுரா, துவாரகை , டில்லி , அஜ்மீர் என கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு ஊரை (கி. பி., 998 முதல் 1030 வரை)அழித்தான்.

கடைசியாக சோமநாதர் ஆலயத்தை தாக்கினான். 50000 பேரை ஒரே நாளில் கொன்றான். 20000 பேரை அடிமையாக பிடித்து சென்றான். சுமார் 1000 யானைகளில் நகைகளை அள்ளிச்சென்றான் .

பள்ளி பாடத்தில் சொல்லி கொடுத்தது போல அவன் 17 முறை தோற்கவில்லை. எல்லா முறையும் வெற்றியே பெற்றான். இரண்டாவது அவன் மாவீரன் அல்ல. கொடூர கொலைகாரன் , கொள்ளையன்.

வரலாறு‬ முக்கியம் அமைச்சரே – 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக